தருமபுரி, மார்ச் 10- இலக்கியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வி.ஜெட்டிஅள்ளி கிராம மக்களுக்கு ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர். தருமபுரி ஒன்றியம், இலக்கியம்பட்டி ஊராட்சிக் குட்பட்டது வி.ஜெட்டிஅள்ளி கிராமம். இக்கிராமத்தில் ஏராள மான விவசாய கூலி தொழிலாளர்கள் வசித்து வருகின்ற னர். இவர்கள் கடந்த சில மாதங்களாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் வேலை பார்த்து வந்த னர். ஆனால், தற்போது இத்திட்டத்தின் மூலம் வேலை வழங்கப்படவில்லை. இதனால் வருமானமின்றி பெரும் சிர மத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, மீண்டும் ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் என்.கந்தசாமி, கிளைச் செயலாளர் பழனி, விவ சாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் ரவி உள்ளிட் டோர் தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசனிடம் மனு அளித்தனர்.