districts

img

காளிபாளையம் ஆதிதிராவிடர் காலனிக்கு சொர்க்க ரத வாகனம் வழங்க கோரிக்கை

திருப்பூர், ஆக. 16 – திருப்பூர் அருகே காளிபாளையம் ஊராட்சி ஆதிதிராவிடர்  காலனியில் இறந்தவர்கள் உடலை மயானத்திற்கு கொண்டு  செல்ல சொர்க்க ரத வாகனம் ஏற்பாடு செய்து தர வேண்டும்  என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது. காளிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளி லும் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றக் கோரி ஊராட்சிமன்ற தலைவர் சுகன்யா வடிவேலிடம் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது. இதில் காளிபாளையம் பகுதியில் ஆதிதிராவிடர் குடியி ருப்புப் பகுதியில் இருந்து இறந்தவர்கள் உடலை மயானத் திற்கு எடுத்துச் செல்ல சொர்க்க ரத வாகனம் ஏற்பாடு செய்ய  வேண்டும், நான்காவது குடிநீர் திட்டத்தை உடனடியாக அமல் படுத்துவதுடன், வரி செலுத்தும் அனைத்து வீடுகளுக்கும் குடி நீர் இணைப்பு வழங்க வேண்டும், ஊராட்சி முழுவதும் சாலை கள் அமைத்துத் தர வேண்டும், அனைத்து மயானங்களை யும் பராமரித்து தூய்மைப்படுத்த வேண்டும், அனைத்து பகுதி களிலும் தெருவிளக்கு அமைத்துத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதில் வடக்கு ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் பி.மகாலிங்கம், பி.கே.கருப்புசாமி, காளிபாளையம்  கிளைச் செயலாளர் கே.பட்டுசாமி, சே.குருவாயூரப்பன்நகர் கிளை செயலாளர் ஆர்.சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.