சேலம், மார்ச் 13- மருத்துவக்காப்பீடு திட்டத்தை ஓய்வூதியர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என ஓய்வூதியர் சங்கத் தினர் வலியுறுத்தியுள்ளனர். சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வி.பி.சிந்தன் நினைவகத்தில், அரசு போக்குவரத்து மற்றும் போக்குவரத்து ஓய்வூதியர் நலச்சங்கம் சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.பரமசிவம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சி.பி.வாசன் துவக்க உரையாற்றி னார். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஓய்வூதியர்கள் பேசுகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து மற்றும் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு மருத்துவக்காப் பீடு திட்டத்தை இலவசமாக வழங்க வேண்டும். உறுப் பினர் சந்தா தொகை செலுத்தினால் அந்த வருடங்க ளில் மருத்துவ செலவுகள் செய்த முழு தொகையை யும் திரும்பத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய் வூதியர் சங்க மாநில உதவிச்செயலாளர் டி.மணிமுடி, மாவட்டச் செயலாளர் சி.ராஜ்குமார், நிர்வாகிகள் சி. செல்லமுத்து, ராமசாமி, தியாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.