நாமக்கல், நவ.24- நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திறக்கப்பட்ட நிலை யில், போதிய போக்குவரத்து வசதி ஏற்ப டுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நாமக்கல் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில், அரசு மருத்துவக்கல்லூரி யுடன் இணைந்த மருத்துவமனை செவ் வாயன்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. 6 தளங்களுடன் செயல்படும் இந்த மருத்துவமனையில் அதிநவீன மருத்துவ உபகரணங்கள், 700 படுக்கை வசதிகள் உள்ளன. தற்போது, நாமக் கல் - மோகனூர் சாலையில் அரசு மருத்து வமனை செயல்பட்டு வருகிறது. படிப் படியாக நோயாளிகளை புதிய மருத்து வமனைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. திருச்செங்கோடு சாலையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ஆட் சியர் அலுவலகத்தில் இருந்து 2.5 கி.மீ. தொலைவு நடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இரவு நேரங்களில் தனி யாக செல்ல முடியாத நிலை உள்ளது. இதனை தவிர்க்க, நாமக்கல்லில் இருந்து ஈரோடு, கோவை, திருச்செங் கோடு நோக்கி செல்லும் அனைத்துப் பேருந்துகளையும், அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனை வரை சென்று, அதன்பிறகு சம்பந்தப்பட்ட மார்க்கங் கள் நோக்கி செல்ல அனுமதிக்க வேண் டும் என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் போக்குவரத்துத் துறைக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் கடிதம் வழங் கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வா கத்தினர் கூறுகையில், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் முதல், இரண்டு, மூன்றாம் ஆண்டுகளில் தற்போது 300 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். அவர்கள் பயிற்சி பெறுவதற்கு ஏற்ப அருகிலேயே மருத்துவமனை அமைக் கப்பட்டுள்ளது. தற்போது மருத்துவம னையில் 192 மருத்துவர்கள், 248 செவிலி யர்கள், 207 இதர மருத்துவப் பணி யாளர்கள், 50 ஆய்வகப் பணியாளர் கள், 222 தூய்மைப் பணியாளர்கள் உள் ளனர். புதிய அரசு மருத்துவமனை கட்டடத்தில் தற்போது புறநோயாளி களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அங்கு வரும் மக்கள் யாரையும் திருப்பி அனுப்புவதில்லை. படிப்படியாக, மோகனூர் சாலையில் உள்ள மருத்து வமனையில் இருந்து புதிய கட்டடத் துக்கு செயல்பாட்டுக்கு கொண்டு வரு வோம். முக்கியத் தேவைக்குரிய மருத் துவ உபகரணங்கள் எடுத்து வரப்படும். மருத்துவமனைக்கு மக்கள் வந்து செல்ல போக்குவரத்து வசதி செய்து தரக்கோரியும், இதர வசதிகள் கேட்டும் ஆட்சியர், போக்குவரத்து அதிகாரிக ளுக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல் - மோகனூர் சாலையி லுள்ள அரசு மருத்துவமனை கட்டடம், அரசு சித்த மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையாக மாற வாய்ப்புள் ளது. மருத்துவ நலப்பணிகள், காச நோய் இணை இயக்குநர் அலுவலகம் அங்கு செயல்படும். ஒன்றன்பின் ஒன் றாக பணிகள் நடைபெற உள்ளன. புதிய அரசு மருத்துவமனை முழுமையாக செயல்பாட்டுக்கு வருவதற்கு இன்னும் இரண்டு மாதங்களாகிவிடும், என்ற னர்.