உடுமலை, செப். 12 - பழங்கால மக்களின் வாழ்க்கை நிலையை உணர்த் தும் கல்வெட்டுகளை பாது காக்க உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து உடுமலை வர லாற்று ஆய்வு நடுவத்தினர் கூறியிருப்பதாவது: மடத்துக்குளம் தாலுக்கா கண்ணாடிப்புத்தூரில் கல்வெட்டு இல் லாமல் ஓர் அத்திகோசங் குலச் சிற்பம் உள்ளது. அத்திகோசத்தார் அரசர்க ளுக்கு ஆலோசனை கூறக்கூடிய வணி கர்கள். இந்த வணிகம் சார்ந்த கல் வெட்டே அத்திகோசத்தார் கல்வெட்டு. வணிகர்கள் தென்னிந்தியா முழுவதும் பரவலாகச் செயல்பட்டனர் என்பன உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. இந்த கல்வெட்டின்படி அத்தி என் றால் யானை, கோசம் என்பது கருவூ லத்தையும் பழங்குடியினரையும் குறிக் கும் சொல்லாகும். அந்தவகையில் பழங்குடி மக்கள் கூட்டத்தினரைக் குறிக் கும் சொல்லே அத்திகோசத்தார். பெருங்கதையில் இதே சொல்லுடன் ஒப் பிட்டு அத்திகோசத்தார் யானை வணி கம் செய்தவர்கள் என்றும் பொருள்ப டும் வகையில் உள்ளது. மயிலை சீனி வேங்கடசாமி இது ‘யானைப் படை யின் கட்டளை அதி காரிகளை குறிக் கிறது என்று அவர் விளக்குகிறார்.
எனவே, அத்திகோ சத்தார் அல்லது ஹஸ்திகோசா யானைப்படைகள் மற்றும் மலைப்ப குதிகளிலும் முக்கிய நெடுஞ்சாலை களிலும் வணிகர்களுக்குப் பணிபுரியும் போராளிகளைக் கொண்ட ஒரு குழு வாக இருந்ததாக ஊகிக்க முடியும். கண்ணாடிப்புத்தூரில் உள்ள கல் வெட்டு அறிஞர்களால் ஆய்வு செய்யப் பட்டது. இந்த கல்வெட்டு கி.பி. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்க லாம் என உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கூறுகின்றனர். இந்தக் கல்வெட்டு எண்ணற்ற உரு வங்களைக் கொண்டது. அதில் எழுத் துக்கள் இல்லை. ஒரு யானை, குதிரை, கோடாரி, கத்தி, வால் (குத்து), அங்குசம் (யானையைக் கட்டுப்படுத்தப் பயன்ப டும் ஒரு வகை ஆயுதம்) அரிவாள், கொடுவாள், கேடயம் மற்றும் சுருள் கத்தி போன்றவற்றை வெளிப்படுத்தும் புடைப்புச்சிற்பங்கள் உள்ளன. அதே கல்வெட்டின் மறுபுறத்தில் கேடயம் (கவசம்) இரண்டு வில் மற்றும் அம்புகள் மற்றும் வேல் போன்ற மேலும் சில உருவங்களையும், சிலை களையும் உடுமலை வரலாற்று ஆய்வா ளர்கள் ஆவணப்படுத்தி உள்ளனர். கண்ணாடிப்புத்தூரில் உள்ள இந்தக் கல்வெட்டுகள் அத்திகோசத் தார்களால் பொறிக்கப்பட்டிருக்கலாம். கரைவழி நாட்டில் யானை வணிகர்களு டன் குடியேறினர். இங்கு யானை வணி கம் மிகவும் பிரபலமாக இருந்ததை கல் வெட்டுகளின் வழி அறிய முடிகிறது. இந்தக் கற்சிற்பம் உள்ள கல் வெட்டு இங்கு கேட்பாரற்று மண் புதர்கள் குப்பை கூளங்களுக்கு இடையே கிடக் கிறது. வரலாற்றுச் சிற்பமிக்க இந்த சிற்பக் கல்வெட்டு இப்படி சிதிலம டைந்து கிடப்பது வரலாற்று ஆய்வாளர் களுக்கு மிகுந்த வேதனையைத் தரு கிறது என்று உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கூறியுள்ளனர்.