திருப்பூர், ஜூன் 17– அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் ஆன் லைன் மூலம் கேட்பு மனு விண்ணப்பித்த இரண்டு மாதங்க ளில் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு திருப்பூர் மாவட்ட கட்டுமானம் அமைப்பு சாரா தொழிற்சங்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர். இது தொடர்பாக கூட்டமைப்பு தலைவர் ஏ.சிவசாமி உள் ளிட்டோர் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேச னிடம் திருப்பூரில் புதன்கிழமை அளித்த மனுவில், கேட்பு மனு தாக்கல் செய்த இரு மாதங்களில் ஓய்வூதியம் வழங்க ஆவன செய்யும்படி கேட்டுக் கொண்டனர். அத்துடன், பதிவின்போது கொடுக்கப்பட்ட செல்போன் எண்கள் தொலைந்து விட்டால் அலுவலகத்திலேயே மாற் றம் செய்து கொள்ளவும் கேட்டுகொண்டுள்ளனர்.