ஊருக்குள்ளேயே புதிய பள்ளி ஆட்சியரிடம் கோரிக்கை நாமக்கல்
, பிப். 12- ஊருக்குள் இருக்கும் பழைய பள்ளியின் அருகிலேயே புதிய பள்ளிக்கான வகுப்பறையை கட்டாமல் ஊருக்கு வெளியே பள்ளியை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொட் டாணம் கிராம மக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், பொட்ட ணம் கிராமத்தில் 152 மாணவ- மாணவிகளுடன் அரசு உயர் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், புதிய கட்டிடத்தில் இயங்குவதற்காக ஏற்கனவே பள்ளி இருக்கும் பகுதியில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் தள்ளி, ஊரின் ஒதுக்குப்புறத்தில் கட்டப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். இதனைரத்து செய்து, பழைய பள்ளியின் அருகிலேயே உள்ள காலி நிலத்தில் புதிய வகுப்பறைகளுடன் கூடிய பள்ளியை கட்ட வேண்டும் என, வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், தற்போது புதிய வகுப்பறை பள்ளிகள் கட்ட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடம் ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ளது. மேலும், அப் பள்ளிக்கு செல்லும் வழியில் மயான பகுதி உள்ளது. இது மாணவ மாணவிகளுக்கு, பாதிப்பு ஏற்படும். பெண் குழந்தை களின் நலன் கருதி, பொட்டணம் ஊருக்குள் பழைய பள்ளி அமைந்துள்ள இடத்திற்கு அருகே புதிய பள்ளியை கட்ட வேண்டும் என்று ஆட்சியரிடம் மனு அளிக்க வந்துள்ளதாக தெரிவித்தனர்.