districts

img

மாணவர்களை அரசுப்பள்ளியில் சேர்க்க வேண்டுகோள்

திருப்பூர், ஜூன் 2- திருப்பூர் மாவட்டம், முத்தூர் பேரூ ராட்சி பேருந்து நிலையத்தில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்கும் விதமாக வாகன ஒலி பேர ணியை மாநில செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் புதனன்று கொடிய சைத்து துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து அவர் கூறுகையில், தமிழக பள்ளிக்கல்வித்துறையின் மூலம் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலை யில்லா கிரையான் மற்றும் வண்ண பென் சில்கள், கணித உபகரணப்பெட்டி, புவியி யல் வரைபட நூல், மிதிவண்டி, பெண் குழந்தைகளுக்கான சிறப்பு ஊக்கத் தொகை, வருவாய் ஈட்டும் தாய்/தந்தையை  இழந்த மாணவர்களுக்கான துயர்துடைப்பு நிதியும் வழங்கப்படுகிறது. மேலும், அரசுப்பள்ளிகளில் டைல்ஸ் பதிக்கப்பட்ட  காற்றோட்டமான சித்திரங்கள் வரையப் பட்ட வகுப்பறை, நோட்டுப் புத்தகங்கள், மடிக்கணினி, மாணவர்களுக்கான ஓவியம், கட்டுரை, பேச்சு மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது.  ஆங்கில வழிக்கல்வி, அறிவியல் கண் காட்சி, சுற்றுச்சூழல் மன்றம், தேசிய பசு மைப்படை, பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக்குழு நல்ல முறையில் அமைக்கப்பட்டுள்ளது. அரசுப்பள்ளியில் தரமான கல்வியை உறுதிப்படுத்த மாண வர்களை அரசுப்பள்ளியில் சேர்த்து பயன் பெற வேண்டும் என கூறினார். இதைத் தொடர்ந்து 5 நபர்களுக்கு முதியோர் உத வித்தொகைக்கான ஆணையினை அமைச் சர் சாமிநாதன் வழங்கினார். இதில்,  ஏரா ளமானோர் கலந்து கொண்டனர்.