உடுமலை, ஏப்.3- அமராவதி ஆற்றின் குறுக்கே உள்ள முதல் தடுப்பணை பொன்னி காட்டுதுறை தடுப்பணை. இதை மேம் படுத்தப்பட்ட சுற்றுலா தலமாக அறி விக்க வேண்டும் என சுற்றலா பயணி கள் கோரிக்கை வைத்து உள்ளார் கள். திருப்பூர் மாவட்டம், உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகா எல்லை பகுதியான பெருமாள்புதூர் கிராமத்திலிருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில், அமராவதி ஆற் றின் குறுக்கே விவசாய பயன்பாட் டிற்கு என்று கட்டப்பட்ட தடுப்பணை உள்ளது. இதன் மூலம் ஆற்றின் இரண்டு கரைகளிலும் இருக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநி லங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும், அருகில் உள்ள கிராமங்க ளின் நிலத்தடி நீர் மட்டம் உயரவும், ஆழ்குழாய் கிணறுகள் மூலம் குடிநீர் வசதியை ஏற்படுத்தும் வகையிலும், இயற்கை எழில் கொஞ்சும் வகை யில் கரைகளின் இரண்டு புறங்களி லும் பனைமரம் மற்றும் நாட்டு மரங்கள் உள்ளது. இந்த பொன்னி காட்டுதுறை தடுப்பணை ஒரு சிறிய அணை போன்ற தோற்றத்தில் தான் உள்ளது. இதே போல், திருமூர்த்திமலை யில் பஞ்சலிங்க அருவி அமைந் துள்ள இடத்தில் செயற்கையாக ஒரு அருவியை ஏற்படுத்தியதால் அந்த இடம் சுற்றுலா பயணிகள் அதிக மாக வருகை தருகின்றனர். அதே போல் இந்த பொன்னிகாட்டுதுறை தடுப்பானைப் பகுதியில் படகு சவாரி மற்றும் சிறிய பூங்கா அமைத்தால் மிக சிறந்த சுற்றுலா தலமாக மாறும். இது குறித்து அருகில் உள்ள கிராம மக்கள் தெரிவிக்கையில், அம ராவதி ஆற்றின் முதல் தடுப்பணை பொன்னிகாட்டுதுறையில் அமைத்து உள்ளது. இந்த அணையில் பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும், கேரள மாநிலத்திலிருந்து பழனி மற்றும் திருமூர்த்தி அணைகளுக்கு செல்லும் முக்கிய சாலையாகவும் இது உள்ளதால், இந்த தடுப்ப ணையை மேம் படுத்தப்பட்ட சுற்றுலா தலமாக அறிவித்து அடிப்படை வசதி களை செய்து தர வேண்டும் என்றார் கள்.