districts

குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையை ஒருவழிப்பாதையாக மாற்ற கோரிக்கை

உதகை, மே 2- சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையை ஒரு வழிப்பாதையாக மாற்ற  வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ளது. கோடை சீசனை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் அதிகள வில் நீலகிரி மாவட்டத்திற்கு படையெடுத் துள்ளனர். இதனால், குன்னூர் - மேட்டுப்பா ளையம் சாலையில் வாகன நெரிசல் அதிக ரித்து இருந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த ஏப்.16 ஆம் தேதி முதல் குன்னூர் - மேட்டுப் பாளையம் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டார். இதன்படி மேட்டுப்பாளை யத்திலிருந்து குன்னூர் மற்றும் உதகைக்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை லாரி  உட்பட கனரக வாகனங்களுக்கு குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் அனு மதிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர், உதகைக்கு வரும் இதர வாகனங்கள் மேட் டுப்பாளையம் - குன்னூர் வழியாக அனு மதிக்கப்படுகின்றன. பகல் நேரத்தில் உதகை, குன்னூரிலிருந்து மேட்டுப்பாளை யம் செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழி யாக செல்ல அனுமதிக்கப்படுகிறது. இத னால் டாக்ஸி கட்டணம் உயர்வால் பொது மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, சனி, ஞாயிற்றுக்கிழமை மட்டும் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையை ஒரு வழிப்பாதையாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் லாரி ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வாகன ஓட்டுநர்கள் கூறு கையில், கடந்த சீசன் காலங்களில் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் மட்டுமே ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டது. ஆனால், இப் போது சீசன் முடியும் வரை ஒரு வழிப்பாதை யாக இச்சாலை அறிவிக்கப்பட்டுள்ளது. லாரி களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள தால், ஏற்கனவே நசிந்த நிலையில் உள்ள  லாரி தொழில் மேலும் பாதிக்கப்படும் அபா யம் உள்ளது. தற்போது வார நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவு வராததால் பகல் நேரத்தில் குன்னூர்- மேட்டுப்பாளை யம் சாலை வெறிச்சோடி காணப்படுகிறது. சீசன் காலம் முழுவதும் மேற்கண்ட சாலை ஒரு வழிப்பாதை என்பதை மாற்றி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஒரு வழி பாதையாக அறிவிக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும், என்றனர்.