districts

img

போலி உரம், விதைகள் விற்பனையை கட்டுப்படுத்த கோரிக்கை

தாராபுரம், ஜன.19- தாராபுரத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி மற்றும் விவசாய சங்கங்கள் சார்பில் தைத்திருநாள் கொடியேற்று விழா மற்றும் பொங்கல் விழா நடைபெற்றது.  தாராபுரம் தனியார் திருமண மண்டபத் தில் உழவர் உழைப்பாளர் கட்சி மற்றும் விவ சாய சங்கங்கள் சார்பில் தைத்திருநாள் கொடியேற்று விழா மற்றும் பொங்கள் விழா  நடைபெற்றது. இந்த விழாவிற்கு உழவர்  உழைப்பாளர் கட்சி மாவட்ட தலைவர் ஆர். ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். கட்சி யின் மாநில தலைவர் கு.செல்லமுத்து பொங்கல் திருநாள் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியதாவது, அரசு நேரடி கொள்முதல் நிலையங்களை தொடங்கி கொள்முதல் செய்ய வேண்டும். ஆன்லைன் முன்பதிவு முறையை ரத்து செய்து, பழைய முறை யில் டோக்கன் கொடுத்து வரிசைப்படி கொள்முதல் செய்ய வேண்டும்.  மேலும் மக்காச்சோளம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 500 ஆக நிர்ண யம் செய்திட வேண்டும். போலி உரம், விதைகள் விற்பனையை அரசு கட்டுப்ப டுத்த வேண்டும். உப்பாறு மற்றும் வட்ட மலை கரை அணைகள் நிரம்பி உள்ளது. எனவே பொதுப்பணித்துறையினர் கால் வாய்களில் தண்ணீர் திறந்து விட்டு பாசனம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். பால்  உற்பத்தியாளர்களுக்கு லிட்டர் ஒன்றுக்கு  ரூ.5 உயர்த்தி வழங்க வேண்டும். விவசாயி களை முன்களப் பணியாளர்களாக அறி வித்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க  வேண்டும். இவ்வாறு பேசினார். விழாவில் விவசாய சங்க நிர்வாகிகள் உள்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.