districts

img

பாதாளச் சாக்கடை அமைத்து தார்ச் சாலை அமைக்க கோரிக்கை

திருப்பூர், டிச. 26- பாதாளச் சாக்கடை அமைத்து தார்ச் சாலை அமைக்க  வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர் வடக்கு  ஒன்றியக்குழு சார்பில் 2 ஆவது மண்டல அலுவலகத்தில் செவ் வாயன்று மனு அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சி 4 ஆவது வார்டுக்கு உட்பட்ட தோட் டத்துப்பாளையம் கிழக்குப் பகுதி பெத்தேல் சிட்டி மற்றும்  ஸ்ரீ சக்தி அவென்யூ பகுதியில் பாதாளச் சாக்கடை அமைத்து  தார்ச் சாலை அமைக்க வேண்டும். தெரு விளக்கு வசதிகள்  செய்து தர வேண்டும் உட்பட பல்வேறு அடிப்படை பிரச்சனை களைச் சரி செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  திருப்பூர் வடக்கு ஒன்றிய குழு சார்பில் மாநகராட்சி 2 ஆவது  மண்டலம் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு  உறுப்பினர் ஆர். மைதிலி, வடக்கு ஒன்றியக்குழு உறுப்பினர்  பி.மகாலிங்கம், தோட்டத்துப்பாளையம் கிளைச் செயலாளர்  இ.மங்கலக்ஷ்மி உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்ட னர்.