districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

அரசு பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியம்

நாமக்கல், அக்.17- அரசு பேருந்து ஓட்டுநரின்  சாமர்த்தியத்தால் நூலி ழையில் உயிர் தப்பிய நபர்.  பேருந்து ஓட்டுநருக்கு பொது மக்கள் வாழ்த்து தெரிவித் தனர். நாமக்கல் மாவட்டம், வெப்படையிலிருந்து சங்க கிரி செல்லும் சாலையில், மக்கிரிபாளையம் அருகே ,  அரசு பேருந்து வருவதை  கவனிக்காமல், செளதா புரம் பிரிவிலிருந்து சைக் கிளில் வந்த நபர் சாலையை  கடக்க முயன்றார். அபோது  ஈரோட்டிலிருந்து சேலம்  நோக்கி சென்று கொண் டிருந்த அரசு பேருந்தின் ஓட்டு நர், சைக்கிளில் வந்த நபர்  மீது மோதாமல் இருக்க பேருந்தினை சாலையின் எதிர் திசையில் லாவகமாக திருப்பினார். இதனால் சைக் கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் அரசு பேருந்து ஓட்டுநரின் சாமர்த் தியத்தால் நூலிழையில் உயிர் தப்பினார். மேலும் எதிர் திசையில்  வாகனங்கள் ஏதும் வராத தால் பெரும் விபத்து தவிர்க் கப்பட்டது. தற்போது இந்த  விபத்து குறித்த சிசிடிவி  காட்சிகள் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி  வருகிறது.

அரூர் தேசிய நெடுஞ்சாலையோரம் கழிவுநீர் கால்வாய் அமைக்க கோரிக்கை

தருமபுரி, அக்.17- அரூரில் தேசிய நெடுஞ்சாலையோரம் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என  வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள் ளனர். தருமபுரி மாவட்டம், அரூர் வழியாக சேலம் - வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலை பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு, கடந்தாண்டு நிறைவ டைந்தது. இந்த தேசிய நெடுஞ்சாலையானது  அரூர் நகரத்தின் வழியாக சுமார் 5 கிலோ மீட்டர் செல்கிறது. இச்சாலையோரம் கழிவு நீர் கால்வாய் அமைக்கவில்லை. இதனால் கடைகளில் இருந்து வரும் கழிவுநீர் சாலை யில் ஓடுகிறது. மேலும், மழை காலங்களில்  மழைநீரானது சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.  எனவே, அரூர் தேசிய நெடுஞ்சாலை யோரம் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண் டும் என வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெறுப்பை தூண்டும் அவதூறு பேச்சு:  இந்து முன்னணி நிர்வாகி கைது

திருப்பூர், அக். 17 - ஈரோடு மாவட்டம், புளியம்பட்டியில் விநாயகர் சதுர்த்தி  பொதுக் கூட்டத்தில் வெறுப்பை தூண்டும் அவதூறு பரப்பிய  இந்து முன்னணி நிர்வாகி கைது செய்யப்பட்டார். விநாயகர் சதுர்த்தி பொதுக் கூட்டத்தில், இந்து முன்னணி  மாநில செயலாளர் செந்தில்குமார், நீலகிரி  பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ஆ.ராசா மற்றும் திமுக குறித்து அவதூ றாக பேசி, வெறுப்பை பரப்பியதாக, புளியம்பட்டி நகர திமுக  செயலாளர் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் காவல்  துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து  புளியம்பட்டி போலீசார் செவ்வாயன்று திருப்பூரில் செந்தில் குமாரை, அம்மாபாளையம் பகுதியில் கைது செய்தனர்.தகவல் அறிந்து உடனடியாக இருபதுக்கும் மேற்பட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் கூடி போலீஸ் ஜீப்பை மறித்து  முற்றுகையிட்டு, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து  சம்பவ இடத்திற்கு வந்த திருமுருகன் பூண்டி போலீசார், கைது செய்யப்பட்ட செந்தில்குமாரை திரு முருகன்பூண்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற னர். அங்கு, காவல் நிலையத்தை முற்றுகையிட்ட  இந்து  முன்னணி நிர்வாகிகள், போலீசாரிடம் கடும் வாக்குவாதம் செய்து தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட செந் தில்குமாரை  புளியம்பட்டி காவல் நிலையத்திற்கு, போலீ சாருடன் திருமுருகன்பூண்டி போலீசார் அனுப்பி வைத்தனர்.

சிக்கண்ணா கல்லூரி மாணவர் மாநில சாகச முகாமிற்கு தேர்வு

திருப்பூர், அக். 17 - சேலம் மாவட்டம் ஏற்காட்டில் அக் 16 – 20ஆம் தேதி வரை  மாநில சாகச முகாம் நடைபெறுகிறது. மாநில இளைஞர் நலன்  விளையாட்டுத் துறை சார்பில் நடத்தப்படும் இம்முகாமில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்ப ணித் திட்டம் அலகு-2 மாணவன் ஜோஸ்வா கிஷோர் (மூன் றாமாண்டு பொருளாதாரம்) தேர்வு செய்யப்பட்டுள்ளார். இம் முகாமில் மலையேறும் பயிற்சி, கலாச்சாரம், ஆளுமை, சமூ கம் மற்றும் சூற்றுச்சூழல் சம்பந்தமான நிகழ்வுகள் நடை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீடித்த நிலையான கோழி உற்பத்தி என்ற தலைப்பில்  உடுமலையில் மாநில அளவிலான பயிலரங்கம்

உடுமலை, அக்.17- தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவி யல் பல்கலைக்கழகத்தில் நிதியுதவிடன் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கோழி  சுகாதார மைய திட்டதின் மூலம் செவ்வா யன்று  உடுமலைப்பேட்டை கால்நடை மருத் துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலை யத்தில் நீடித்த நிலையான கோழி உற்பத்தி  என்ற தலைப்பில் மாநில அளவிலான பங்கு தாரர்களுக்கான பயிலரங்கம் நடை பெற்றது. இந்த பயிலரங்கில் கோழிப் பண்ணை  பங்குதாரர்களான கோழி பண்ணையாளர் கள். ஒருங்கிணைப்பாளர்கள். தொழில்மு னைவோர், கோழிப் பண்ணை சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் வல்லுநர்கள் பங்கேற் றனர். கோழி உற்பத்தியில் தீவனத்தின் முக்கி யத்துவம், நுண்ணுயிரி எதிர்ப்பு மருந்துக ளுக்கு எதிர்ப்பு சக்தி உருவாவதை தடுக் கும் ஒருங்கிணைந்த சுகாதார முறை, உணவு  மூலம் பரவும் நோய்க்கிருமிகள், மதிப்பு கூட்டல் மற்றும் ஆராய்ச்சி வழிகள் உள்ளிட்ட  தலைப்புகளில் விரிவுரைகள் பல்வேறு நிறு வன நிபுணர்களால் வழங்கப்பட்டது.  பின்னர் கோழிப் பண்ணை பங்குதாரர்க ளுக்கிடையே கோழிப் பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும்  பிரச்சனைகள் குறித்து கலந் துரையாடல் நடைபெற்றது. மேலும் பண் ணையாளர்கள் பயன்பெறும் வகையில் கல் லூரி வளாகத்தில் கோழிப் கோழிப்பண்ணை உபகர ணங்கள், கோழித் தீவன சேர்வைகள், கோழி களுக்கான மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. இதனை 121  கோழிப்பண்ணையாளர்கள், 34 பங்குதாரர் கள், 53 மேற்பார்வையாளர்கள் மற்றும் மேலா ளர்கள் பார்வையிட்டதுடன் இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியான பண்ணையாளர்கள், வல்லு நர்கள் சந்திப்பிலும் கலந்துகொண்டு  சந்தே கங்களுக்கு தீர்வு காணப்பட்டன. இதில், உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலை யத்தின் முதல்வர் மற்றும் இத்திட்ட முதன்மை  ஆராய்ச்சியாளர் பா.குமாரவேல்   திட்ட செயல்பாடுகள் மற்றும் முடிவுகள் பற்றி  விவரித்தார். லண்டனின் ராயல் கால்நடை கல் லூரியின் பேராசிரியர் மற்றும் திட்ட இயக் குநர் பியானோ டாம்லி இணையதளம் மூலம்  திட்ட விளக்கவுரை அளித்தார்.  உடுமலைப்பேட்டை சுகுணா கோழியின  மேலாண்மை நிறுவனத்தின் முதல்வர் கு.மணி  கோழி உற்பத்தியில் உயிர் பாது காப்பு என்ற குறுந்தகட்டை வெளியிட்டு சிறப் புரையாற்றினார். பொள்ளாச்சி சக்தி சுகர்ஸ்  சோயா பிரிவின் முதுநிலை பொது மேலாளர்  இரா.சிவக்குமார்  வாழ்த்தி பேசினார். சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி கால்நடை நுண்ணுயிரியல் துறையின் பேரா சிரியர் பொ.சாமுவேல் மாசிலாமணி ரொனால்டு  கருத்தரங்கு அறிமுகவுரை ஆற் றினார். கால்நடை மருத்துவக் கல்லூரி பேரா சிரியர் க.செந்தில்வேல்  வரவேற்று பேசினார்.  தேனி விவசாயிகள் பயிற்சி மையத்தின் இணைப் பேராசிரியர்  ந.விமல் ராஜ்குமார்  நன்றி கூறினார்.

தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க பின்னலாடை சங்கங்களுக்கு சிஐடியு கடிதம்

திருப்பூர், அக். 17 – திருப்பூர் தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு 15  நாட்களுக்கு முன்னதாக கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடு தல் போனஸ் வழங்குமாறு அனைத்து பின்னலாடை உற்பத்தி யாளர் சங்கங்களுக்கும் சிஐடியு சார்பில் கடிதம் அனுப்பப் பட்டு உள்ளது. இது தொடர்பாக சிஐடியு பனியன் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.சம்பத் அனுப்பியுள்ள கடி தத்தில் கூறியிருப்பதாவது: மிகக் கடுமையான விலைவாசி  உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளால் பனியன் தொழிலாளர் கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத அளவு நெருக்கடியில் உள்ளனர். எனவே  பண்டிகை கால தேவைகளை ஓரளவாவது நிறைவேற்றக் கூடிய அளவு கடந்த ஆண்டைக்காட்டிலும் கூடுதலான போனஸ் வழங்க வேண்டும். மேலும் பீஸ்ரேட் மற்றும் காண்ட்ராக்ட் முறையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வேலை செய்த நாட்களுக் கேற்ப சட்டப்படி சதவீத அடிப்படையில் போனஸ்  வழங்கப்படுவதை முதன்மை வேலை அளிப்பவரான கம் பெனி நிர்வாகங்கள் உறுதிப்படுத்த வேண்டும், போனஸ் தொகையை தீபாவளிக்கு 15 நாட்களுக்கு முன்னதாக வழங்க  வேண்டும் என சிஐடியு பனியன் பொதுத் தொழிலாளர் சங்கம்  கேட்டுக் கொண்டுள்ளது.

8 மணி நேர வேலைக்கு ரூ.1000 ஊதியம் வழங்க பஞ்சாலை முத்தரப்பு குழுவிடம் ஏஐடியுசி கோரிக்கை

திருப்பூர், அக். 17 – பஞ்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 8 மணி நேர வேலைக்கு ரூ.1000 நிர் ணயிக்க வேண்டும் என்று ஏஐடியுசி கோரியுள்ளது. பஞ்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்திட தமிழ்நாடு அரசு  அமைத்துள்ள, அரசு அதிகாரிகள், அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள், நிர்வாக தரப்பு உள்ளடக்கிய முத்தரப்புக் குழு  கருத்துக் கேட்புக் கூட்டம் செவ்வாயன்று காலை 10.30 மணிய ளவில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  அறை எண் 120இல் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏஐடியுசி திருப்பூர் மாவட்ட மில் தொழிலா ளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் வி.சவுந்தரராஜன், ஏஐ டியுசி மாவட்ட கவுன்சில் பொதுச்செயலாளர் பி.ஆர்.நடரா ஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பஞ்சாலை தொழிலாளர் களுக்கு 8 மணி நேர வேலைக்கு ரூ.1000, ஈஎஸ்ஐ., பி.எப்., பிடித் தம் செய்ய வேண்டும், சட்ட சமூகப் பாதுகாப்பு வழங்க வேண் டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.

திருப்பூரில் நாளை மின்தடை

திருப்பூர், அக்.17- திருப்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்  நடைபெற இருப்பதால் அக்.19ஆம் தேதி வியாழனன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம்  தடைபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் தடைபடும் பகுதிகள்: அவினாசி சாலை, புஷ்பா  தியேட்டர், காலேஜ் சாலை, ஓடக்காடு, பங்களா ஸ்டாப்,  காவேரி வீதி, ஹவுசிங் யூனிட், முத்துசாமி வீதி விரிவு, கே. ஆர்.இ லேஅவுட், எஸ்.ஆர்.நகர் வடக்கு, நேதாஜி வீதி,  குமரன் வீதி, பாத்திமா நகர், டெலிபோன் காலனி, வித்யா நகர்,  எம்.ஜி.ஆர். நகர், பாரதி நகர், வளையங்காடு, முருங்கப்பா ளையம், மாஸ்கோ நகர், காமாட்சிபுரம், பூத்தார் தியேட்டர்  ஏரியா, ஆசர் நகர், நாராயணசாமி நகர், காந்திநகர், டிடிபி  மில்லின் ஒரு பகுதி, சாமிநாதபுரம், பத்மாவதிபுரம், அண்ணா  காலனி, ஜீவா காலனி, அங்கேரிபாளையம் சாலை, சிங்கார வேலன் நகர் ஆகிய பகுதிகள் மின் விநியோகம் இருக்காது  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மளிகை;ப பொருட்கள் வாங்க நிர்பந்தம் செய்வதற்கு எதிர்ப்பு

திருப்பூர், அக். 17 - ரேசன் கடையில் மளிகைப்பொருட்கள் வாங்க நிர்பந்தம்  செய்வதற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர்  எதிர்ப்புத் தெரிவித்தனர். வேலம்பாளையம் நியாயவிலைக்கடையில் முறைகேட் டில் ஈடுபட்ட கடை ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும். முதியவர்களுக்கு கைரேகை பதியவில்லை என்றாலும்,  பொருட்கள் வழங்க வேண்டும். பிற மாவட்ட கார்டுதாரர்களுக் கும் பொருட்கள் வழங்க வேண்டும் என மாதர்சங்க வேலம் பாளையம் நகரத்தலைவர் வி.அழகு, செயலாளர் ஆர்.கவிதா  ஆகியோர் வேலம்பாளையம் கூட்டுறவு சங்கச் செயல ரிடம் மனு அளித்துள்ளனர்.

வாலிபர்களை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர்: உறவினர்கள் மறியல்

தருமபுரி, அக்.17- பாலக்கோடு அருகே இருசக்கர வாகனம் காலில் ஏறிய தால் காவல் உதவி ஆய்வாளர், 3 வாலிபர்களை தாக்கிய  நிலையில், போலீசாரை கண்டித்து உறவினர்கள் சாலை மறிய லில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள வெள்ளிச் சந்தை சாலை சந்திப்பில் மகேந்திரமங்கலம் போலீசார்  ஞாயிறன்று மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் 3 வாலிபர் கள் வந்தனர். போலீசார் அவர்களை நிறுத்துமாறு கை காட்டி னர். அப்போது காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கோவிந்த சாமி கால் மீது இருசக்கர வாகனம் ஏறியதாக தெரிகிறது. இதனால் அவர் இருசக்கர வாகனத்தில் வந்த 3 வாலிபர்களை யும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த வாலி பர்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதைய டுத்து உறவினர்கள் அங்கு விரைந்து வந்து, வெள்ளிச்சந்தை  சாலை சந்திப்பில் போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்தது சம்பவ இடத்துக்கு வந்த உதவி ஆய்வாளர் ஜெயராமன் உள்ளிட்ட போலீசார், மறி யலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவே உறவினர்கள் மறி யலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இலவச மனைப்பட்டா கேட்டு மனு

ஈரோடு, அக்.17- வீட்டுமனை கேட்டு மனு அளித்து, ஒரு ஆண்டுக்கு மேலா கியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததை உணர்த்தும் வகையில், வாயில் கருப்புத் துணி கட்டியவாறு ஆட்சியரி டம் மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில், நம்பியூர் அருகே உள்ள வரப்பாளையம் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் எங்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டது. அந்த இடத்தில் 35 குடும் பத்தினர் வசித்து வருகிறோம். தற்போது ஒவ்வொரு குடும் பத்திலிருந்தும் 3,4 குழந்தைகள் வளர்ந்து தனி குடும்பங்களா கிவிட்டனர். இதனால், வசிக்க இடமின்றி கடும் அவதிப்பட்டு வருகிறோம். எனவே, எங்கள் குடும்பத்தினருக்கு அரசின் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும். இதுதொடர் பாக கடந்தாண்டு மே 31 ஆம் தேதி நம்பியூர் வட்டாட்சியரி டம் மனு அளித்தோம். அம்மனுவின் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட ஆட்சி யர் தலையிட்டு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என மனு அளித்த னர். இதேபோன்று அந்தியூர் வட்டம், கிழ்வாணி கிராமத்தை  சேர்ந்த தலித் மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, எங்களுக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் அரசு சார்பில் இலவச தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இந்த  வீடுகள் அனைத்தும் தற்போது பழுதடைந்து இடிந்துவிழும் நிலையில் உள்ளன. மழைக்காலம் தொடங்க உள்ள நிலை யில், வீடுகளை பழுது நீக்கித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல எங்கள் பகுதியில் உள்ள சமுதாய  கூடமும் இடிந்துவிழும் நிலையில் உள்ளது. அதையும் சீர மைத்து தர வேண்டும். தேவையான குடிநீர் வசதியும் செய்து  கொடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.

விளை நிலங்கள் வழியாக சாலை அமைக்க எதிர்ப்பு

தருமபுரி, அக்.17- மொரப்பூர் அருகே விளை நிலங்கள் வழி யாக சாலை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை மற்றும் தருமபுரி மாவட்டங்களை இணைக்கும் வகையில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. திருவண்ணாமலை, அரூர், மொரப்பூர், ஒடசல்பட்டி வழியாக தரு மபுரி வரை 4 வழிச்சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலை  மொரப்பூர் வழியாக செல்லாமல் தம்பிசெட் டிப்பட்டி, எம்.வேட்ரப்பட்டி வழியாக தருமபுரி மெயின் ரோட்டில் சென்றடையும் வகையில்,  விவசாய நிலங்கள் வழியாக புற வழிச்சாலை அமைக்க அளவீடு பணிகள் நடைபெற்று வரு கிறது. இந்நிலையில் தம்பிசெட்டிபட்டி, எம். வேட்ரப்பட்டி, நைனாகவுண்டம்பட்டி உள் ளிட்ட பல்வேறு கிராம மக்கள் தங்கள் விவ சாய நிலங்கள் வழியாக 4 வழிச்சாலை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, தம்பிசெட்டிப்பட்டியில் நிலம் அளவீடு செய் யும் செய்யும் இடத்தில் திரண்டனர். இதனால் நிலம் அளவீடு செய்யும் பணிக்காக வந்தி ருந்த அலுவலர்கள் நிலத்தை அளவீடு செய் யாமல் திரும்பி சென்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், நான்கு வழிச்சாலை பணி திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடங்கி மொரப்பூர் அருகே உள்ள பனந்தோப்பு வரையிலும், மொரப்பூர் அடுத்த சென்னம்பட்டியில் இருந்து தருமபுரி வரையிலும் நடைபெற்று வருகிறது. இத னால் சிறு, குறு, நடுத்தர விவசாய குடும்பங் களை சேர்ந்த சுமார் 200 குடும்பங்கள் பாதிக் கப்படுகின்றன. எனவே தமிழக அரசு புறவழிச் சாலை திட்டத்தை கைவிட்டு விட்டு, பனந் தோப்பில் இருந்து மொரப்பூர் வழியாக சென் னம்பட்டி வரை நான்கு வழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது

கோவை, அக்.17- கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் காணாமல் போனதை தொடர்ந்து இருசக்கர வாகன உரிமையாளர்கள் கரு மத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்த னர். இந்நிலையில், சோமனூர் சந்தைப் பேட்டை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண் காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார்  ஆய்வு செய்தனர். அதில் குறிப்பிட்ட நபர்கள் அப்பகுதியிலுள்ள இருசக்கர வாகனத்தை திருடும் காட்சி பதிவாகியிருந்தது. இது தொடர்பாக கருமத்தம்பட்டியைச் சேர்ந்த விஜய் (30), சோமனூர் பகுதியைச் சேர்ந்த  விக்ரம் (22), கடலூர் மாவட்டம், விருதாச்சலம் பகுதியைச் சேர்ந்த சின்னராஜ் (27) ஆகிய மூவரையும் கருமத்தம்பட்டி போலீசார் கைது செய்தனர். மேலும், தனிப்படை போலீசார் விழுப்புரம் பகுதியிலிருந்த 12 இருசக்கர வாக னங்களை பறிமுதல் செய்தனர். மேலும், கைது  செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

பள்ளி குழந்தைகள் பாதுகாப்புடன் செல்ல வாகன வசதி கோரி ஆட்சியரிடம் மனு

ஈரோடு, அக்.17- ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக் கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்களன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுடர் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ்.சி.நட ராஜ் தலைமையில் ஏராளமானோர் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது, கோபி வட்டம், கொங்கர்பாளையம் ஊராட்சி, குண்டேரிபள்ளம் அணை அருகே கம்பனூர் பழங் குடியினர் கிராமம் உள்ளது. இங்கிருந்து பள்ளி செல்லும்  வயதில் 18 குழந்தைகள் உள்ளனர். ஆனால், பள்ளிக்கு செல்ல 8 கி.மீ., தூரத்தில் உள்ள கொங்கர்பாளையம் உயர்நிலைப் பள்ளி அல்லது வினோபா நகர் நடுநிலைப்பள்ளிக்கு செல்ல வேண்டும். அதற்கான பாதை முற்றிலும் அடர்ந்த வனப்பகுதி யில் அமைந்துள்ளது. வனவிலங்குகள் அதிகம் உள்ள வனப் பகுதி என்பதால், இங்குள்ள குழந்தைகள் பள்ளிக்கு செல்ல  போதிய போக்குவரத்து வசதி இல்லாமல் தவித்து வருகின்ற னர். எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, அக்குழந்தைகள் பாதுகாப்புடன் பள்ளிக்கு சென்றுவர உரிய வாகன வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வால்பாறை சாலையில் மண்சரிவு

கோவை, அக்.17- வால்பாறை பகுதியில் பெய்த கனமழை காரணமாக சாலக்குடி செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கி வருகிறது. குறிப்பாக கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு  மையம் அறிவித்திருந்தது. அதன்படி கோவை மாவட்டம், வால்பாறையில் ஞாயிறன்று மாலையில் லேசான மழையாக  தொடங்கி, சிறிது நேரத்தில் கனமழையாக வெளுத்து வாங் கியது. இதேபோல் தமிழக - கேரள வனப்பகுதியையொட்டி உள்ள சாலக்குடி பகுதியிலும் கனமழை பெய்தது. சுமார் 3  மணி நேரம் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக சோலை யாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, ஒரேநாளில் அணை யின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து, 98 அடியை எட்டியுள்ளது. இத னால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், கனமழை காரணமாக சோலையாறு அணை பகுதியில் இருந்து கேரள மாநிலம், சாலக்குடி செல்லும் சாலையில் அம்பலப்பாறை என்ற இடத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் சாலை பழுதடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட் டுள்ளது. சாலக்குடி -வால்பாறை சாலையில் ஏற்பட்ட மண் ச ரிவு காரணமாகவும், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு நலன் கருதியும், வால்பாறை பகுதியில் இருந்து சாலக்குடி செல்லும் தனியார் வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் செல்வதற்கு மறு உத்தரவு வரும் வரை தடை விதிக்கப்பட்டது. கேரள மாநில அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் மற்றும் மளுக்கப்பாறை பகுதியில் இருந்து சாலக்குடி செல் லும் வழியில் உள்ள பொதுமக்கள், மலைவாழ் கிராம மக்கள் அவசிய தேவைகளுக்கு மட்டும் சென்று வருவதற்கு அனுமதி யளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வனத்துறை மற்றும் நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் ஆஜர்

கோவை, அக்.17- கொடநாடு எஸ்டேட்டில்  நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கு நீதிமன் றத்தில் நிலுவையில் உள் ளது. இதுசம்பந்தமாக பலரி டம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலை யில், இது சம்பந்தமான விசா ரணைக்கு மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெய லலிதாவின் கார் ஓட்டுநர் அய் யப்பன் சிபிசிஐடி அலுவல கத்தில் ஆஜராகினார். அவரி டம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.