districts

img

வீட்டில் பின்னலாடை வேலை செய்வோருக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க கோரிக்கை

திருப்பூர், ஜூன் 3–  வீடுகளை அடிப்படையாக கொண்டு ஆயத்தஆடை வேலை செய்யக்கூடியவர்களுக்கு ஊதி யத்தை உயர்த்தி வழங்குமாறு ஏஐடியுசி, ஐஎல்ஓ அமைப்பு சேர்ந்து  நடத்திய கருத்தரங்கில் கோரிக்கை  விடப்பட்டுள்ளது. திருப்பூர் ராயபுரத்தில் தனியார்  விடுதியில் ஆயத்த ஆடைத்  துறையில் வீட்டை அடிப்படை யாகக் கொண்டு பணியாற்றி வரும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் குறித்து கருத்தரங்கம் நடைபெற் றது. இக்கருத்தரங்கிற்கு ஏஐடியுசி தேசிய செயலாளர் வகிதா நிஜாம் தலைமை ஏற்றார்மாநிலப் பொதுச்செயலாளர் டி.எம்.மூர்த்தி தொடக்கிவைத்தார். ஐஎல்ஓ சார் பில் பாரதி பிர்லா, பல்லவிமான் சிங், ஏஐடியுசி மாநிலச்செயலா ளர் நா.பெரியசாமி, எஸ்.சின்ன சாமி, ஏற்றுமதியாளர் சங்கச் செய லர் சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். ஏஐடியுசி தலைவர் கே.சுப்பராயன் எம்.பி. கருத்துரை ஆற்றினார். இந்த கருத்தரங்கில் நிறைவேற் றப்பட்ட தீர்மானம்: திருப்பூர் பின்ன லாடைத் தொழிலில் 15 ஆயிரத் துக்கும் மேற்பட்ட வீட்டை அடிப்ப டையாகக் கொண்டு ஏறத்தாழ ஒரு  லட்சம் பேர் வரை ஆடை உற்பத்தியி லும், அதைச் சார்ந்த தொழில்களி லும் வேலை செய்து வருகிறார் கள். தையல், பிசிறு வெட்டு தல், செக்கிங், சீக்வன்ஸ், ரோப் கோர்த்தல் என பல வகைப்பட்ட வேலைகளை ஒரு நபர் தொடங்கி பத்து பேர் வரை செய்து வருகின்ற னர். இவர்களை ஒற்றுமைப் படுத்தவும், சட்டப் பாதுகாப்பு உள்ள  தொழிலாளர்களாக மாற்றுவ தற்கும் அவர்களுக்கான உரிமை களைப் பெற்றுத் தருவதற்கும் முயற்சி செய்யப்படுகிறது.  வீட்டை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் இந்த தொழி லாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு  கிடைத்திட தேசிய அளவிலான கொள்கையை ஒன்றிய அரசு உரு வாக்க வேண்டும், இவர்களுக்கு என்று தனி நலவாரியம் அமைக்க வேண்டும், இதற்கான பண பலன் களை பெறுவதற்கான நிதியை  ஆடை விற்பனையில் அரசுக்குக்  கிடைக்கும் வரியில் இருந்து தொழி லாளர் நலனுக்காக 5 சதவிகிதம் ஒதுக்க வேண்டும். வங்கிகளில் இந்த தொழில் செய்வதற்கு விண் ணப்பித்திருக்கும் தகுதி உள்ள அனைவருக்கும் கடன் கிடைக்க ஒன்றிய அரசு உத்தரவாதம் அளிக்க  வேண்டும் என்றும் இக்கருத்தரங் கில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.