districts

img

விபத்து ஏற்படுத்தும் பள்ளத்தை சீரமைக்க - சிபிஎம் கவுன்சிலர் கோரிக்கை

அவிநாசி, ஜன.30- அவிநாசி அருகே வஞ்சிபாளை யம் மேம்பாலத்தின் கீழே உள்ள தரை மட்ட பாலத்தில் உள்ள பள்ளத்தை சீர மைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  ஒன்றிய கவுன்சிலர் கோரிக்கை விடுத் துள்ளார். அவிநாசி ஒன்றியம் புதுப்பாளை யம் ஊராட்சிக்குட்பட்ட வஞ்சிபாளை யம் மேம்பாலத்தின் கீழே சுமார் 5 ஆண் டுகளுக்கு முன்பாக தரைமட்ட பாலம் அமைக்கப்பட்டது. இவ்வழியாக கன ரக வாகனங்கள் அதிகமாக சென்று வருகிறது. இந்நிலையில் சில மாதங்க ளுக்கு முன்பு தரைமட்ட பாலம் இடிந்து பெரும் பள்ளம் ஏற்பட்டது.இதனால் இவ்வழியாக செல்லும் இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன.  இதனை தொடர்ந்து தற்காலிகமாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பள்ளத்தின் மேலே பெரிய கற்களை வைத்து மூடியுள்ளன. இதனை உடன டியாக மாவட்ட நிர்வாகம் சீரமைத்து தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் பி.முத்துசாமி கோரிக்கை விடுத்துள் ளார்.