திருப்பூர், ஜூன் 5- மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் திருப்பூர் தெற்கு மாநக ரம் பட்டுக்கோட்டையார் நகர் கிளை மாநாடு ஞாயிறன்று மணி தலைமையில் நடைபெற்றது. மாநாட்டை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் நகர பொரு ளாளர் நா.சஞ்சீவன் துவக்கி வைத்தார். கிளைச் செயலா ளர் பிரபாகரன் வேலை அறிக்கை முன்வைத்தார். வழக்கறி ஞர் நவீன் லட்சுமணன் வாழ்த்திப் பேசினார். புதிய தலை வராக மணி, செயலாளராக பிரபாகரன், பொருளாளராக பேபி, கமிட்டி உறுப்பினர்களாக நிர்மலா, பாப்பாத்தி, மீனாட்சி, அனிதா, மாணிக்கம், ராஜாமணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாற்றுத்தறனாளிகளுக்கு தொழில் தொடங்க மானியத்துடன் வங்கி கடன் வழங்கிட வேண்டும். இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக மாவட்ட தலைவர் டி.ஜெயபால் நிறைவுரையாற்றினார்.