நாமக்கல், ஜூன் 17- வருகை பதிவு குறைவாக உள்ள மாணவர்கள் டிடி வரைவோலை எடுத்து கட்டினால் தான் தேர்வு எழுத முடியும் என்கிற நிலையில் அதற்கான கால அவகாசம் வழங்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் முறையிட் டுள்ளது. இதுகுறித்து மாணவர் சங்கத்தின் நாமக்கல் மாவட்டக்குழு சார்பில் திருவள்ளுவர் அரசு கலை கல்லூரி முதல்வரிடம் அளித்த மனுவில் கூறப் பட்டுள்ளதாவது, நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியில் திருவள்ளுவர் அரசு கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் மூவா யிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாண விகள் பயின்று வருகின்றனர். இந் நிலையில் ஜூன் மாத இறுதியில் மாண வர்களுக்கான பருவ தேர்வு நடைபெற உள்ளது. ஆகவே, வருகை பதிவின் இறுதி நாளாக 20.6.22 திங்கட்கிழமை வரை கல்லூரி செயல்படும் நாளாக முன்வைக்கப்பட்டு, தற்போது மாண வர்களுக்கு பருவ தேர்வு எதிர்கொள்ள கற்றல் விடுமுறை அளிக்கப்பட்டுள் ளது. பெருந்தொற்று காலத்தில் பல மாணவிகளுக்கு திருமணம் நடை பெற்றுள்ள நிலையில் சில மாண விகளுக்கு பேரு காலம் என்பதால் பல நாள் கல்லூரி வர வாய்ப்பு இல்லாமல் விடுப்பு எடுத்து உள்ளனர். தற்போது, வருகை பதிவு குறைவாக உள்ள மாணவர்கள் டிடி வரை வோலை எடுத்து கட்டினால் தான் தேர்வு எழுத முடியும் என்றும், அதற் கான கால அவகாசம் 15.6.22 தேதி யோடு முடிவடைந்த நிலையில், இறுதி யாண்டு மாணவர்கள் நலன் கருதி டிடி வரைவோலை தொகை கட்டுவ தற்கு கூடுதல் அவகாசம் தரப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள் ளது. முன்னதாக, மாணவர் சங்கத்தினர் திருவள்ளுவர் அரசு கலை கல்லூரி முதல்வர் சி. மணிமேகலையிடம் இந்த மனுவை அளித்தனர். இந்திய மாணவர் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட செயலாளர் தே.சரவணன், ராசிபுரம் ஒன்றிய தலைவர் தங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.