ஈரோடு, ஜூன் 30- பல்லாயிரம் விசைத்தறிகள் இயங்காமல் உள்ளது. இலவச வேட்டி சேலை உற்பத்தியை தொடங்க தமிழக அரசு ஆணை பிறப் பிக்க தமிழ்நாடு விசைத்தறி சங்கங்க ளின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள் ளது. விசைத்தறி தொடக்க கூட்டுறவு நெசவாளர் சங்கத்தில் சுமார் 67 ஆயிரம் விசைத்தறிகள் இயங்கி வரு கின்றன. தமிழக அரசின் பள்ளி சீரு டைகள் மற்றும் இலவச வேட்டி சேலை உற்பத்தி மூலம் நெசவாளர் கள் பயனடைந்து வருகின்றனர். கடந்த 10 வருடங்களாக ஜூன் மாதத் தில் உற்பத்தி தொடங்கப்படும். கடந்த வருடம் வேட்டி தயாரிப்பு ஆகஸ்ட் மாதத்திலும், சேலை தயா ரிப்பு நவம்பர் மாதத்திலும் தொடங் கப்பட்ட காரணத்தால் உற்பத்தி செய் வதில் பெரும் தொய்வு ஏற்பட்டது. ஜவுளித்துறையில் நூல் விலை ஏற்றம் காரணமாக பல்லாயிரம் தறி கள் வேலை இல்லாமல் உள்ளது. அதனைச் சார்ந்த நெசவாளர்களும், அவர்கள் குடும்பத்தாலும் மிகவும் பாதிக்கப்பட்டு, பொருளாதார நெருக்கடியில் உள்ளனர். எனவே, கடந்த ஆண்டுகளைப்போல் இந்த ஆண்டும் ஏற்கனவே நடைமுறை யில் இருக்கும் ரகமும், தரமும் மாற் றப்படாமல் இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்ய விரைவில் உத்தர விட வேண்டும். இதனால், பல லட்சம் நெசவாளர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரமும், பொருளாதாரமும் காப்பாற்றப்பட ஏதுவாக இருக்கும் என ஈரோடு சரக கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குநரி டம் தலைவர் எல்.கே.எம்.சுரேஷ் தலைமையில் விண்ணப்பம் கொடுத் தனர். இம்மனுவை தமிழக முதல மைச்சருக்கும் அனுப்பியுள்ளனர்.