districts

img

தாராபுரம் - உடுமலை சாலையை அகலப்படுத்த கோரிக்கை

தாராபுரம், டிச. 23 – தாராபுரம் - உடுமலை சாலை குறுகலாக  இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே இச்சாலையை அகலப்படுத்த வேண் டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர். தாராபுரத்தில் இருந்து காரத்தொழுவு, கணியூர் வழியாக உடுமலைபேட்டை செல்வ தற்கு மாநில நெடுஞ்சாலை உள்ளது. இந்த  சாலை வழியாகவே தாராபுரம் அருகில் உள்ள கொண்டரசம்பாளையம், தளவாய்பட் டிணம், செலாம்பாளையம், ஊத்துப்பாளை யம், சிக்கினாபுரம், கள்ளிவலசு, காரத்தொ ழுவு  உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல வேண் டும். மேலும் கரூரில் இருந்து உடுமலைப் பேட்டைக்கு சரக்கு வாகனங்கள் செல்வ தற்கு பிரதானமான சாலையாகவும் உள்ளது.  இந்நிலையில், இந்த சாலை ஒரே நேரத்தில்  இரண்டு லாரிகள் கடக்க முடியாத அளவில்  தான் உள்ளது. மேலும், வளைவு பகுதிக ளில் எதிரே வரும் வாகனம் தெரியாமல் அடிக் கடி விபத்து ஏற்படுகிறது. கடந்த சில நாட்க ளுக்கு முன்பு கொண்டரசம்பாளையம் அருகே வந்த ஒரு கார் வளைவில் திரும்பும்  போது எதிரே வாகனம் வந்ததால் சாலையை  விட்டு விலகி சாலையோரத்தில் இருந்த  கோழிக்கடை மீது மோதி விபத்திற்குள்ளா னது. இந்த விபத்தில் தனியார் வங்கியில் வேலை செய்து வந்த இளைஞர் உயிரிழந் தார். மேலும், சிறு சிறு விபத்துக்கள் அடிக்கடி  நடக்கிறது. எனவே இந்த சாலையை அகலப் படுத்தி இரு வழிச்சாலையாக மாற்ற வேண் டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.