பன்மாடி வெள்ளிக் கொலுசு வளாக பணி விரைந்து முடிக்க கோரிக்கை
சேலம், ஜூன் 30- சேலம், அரியாகவுண்டம்பட்டியில் நடைபெற்று வரும் பன்மாடி வெள்ளிக் கொலுசு வளாக பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் செவ்வாய்பேட்டை, சூரமங்கலம், குகை, சிவதாபுரம், பனங்காடு, கொண்டலாம்பட்டி, தள வாய்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கொலுசு உற்பத்தி அதிகளவில் நடைபெற்று வருகிறது. இங்கு சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெள்ளிக் கொலுசு சார்ந்த பட்ட றைகள் உள்ளன. சேலம் வெள்ளிக் கொலுசு என்றாலே தனி மவுசு உண்டு. அதாவது, கைவினை கலைஞர்களால் நேர்த்தி யான வடிவமைப்புடன், கலை நியமிக்க வேலைபாடுகளுடன் தயாரிக்கப்படும் வெள்ளிக்கொலுசுகள் நீடித்து உழைக்கும் என்பதால் சேலம் வெள்ளிக் கொலுசுக்கு உலக அளவில் நல்ல மவுசு இருந்து வருகிறது. இரு ஒரு புறம் இருக்க, சேலத்தில் வெள்ளிக் கொலுசு தொழிலை மேம்படுத்தும் வகையிலும், இத்தொழிலில் ஈடு பட்டு வரும் தொழிலாளர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து கொலுசு உற்பத்தி செய்யும் வகையிலும் அரியாகவுண்டம்பட்டியில் ரூ. 24 கோடியே 55 லட்சம் மதிப்பீட்டில் பன்மாடி வெள்ளிக் கொலுசு வளாக கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. இதற்கான கட்டுமான பணி கடந்தாண்டு தொடங்கப்பட்டது. அங்கு 100 தொழில் நிறுவனங்கள் செயல்படும் வகை யில் 3 மாடி கட்டிடமாக கட்டும் பணிகள் தொடங்கி நடை பெற்று வருகிறது. எனவே, இன்னும் சில மாதங்களில் தீபாவளி பண்டிகையும், அதற்கு அடுத்தடுத்த மாதங்களில் புத்தாண்டு, பொங்கல் பண்டிகை வர உள்ளதால் பன்மாடி வெள்ளிக் கொலுசு வளாகம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று வெள்ளிக் கொலுசு உற்பத்தி யாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேளாண் கண்காட்சி
சேலம், ஜூன் 30- சேலம் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் விவசா யிகள் மாதாந்திர குறை தீர்க்கும் தினத்தை முன் னிட்டு, வேளாண்துறை சார் பில் வேளாண் விலை பொருட் கள் கண்காட்சி மற்றும் விற் பனை நடைபெற்றது. இதில் சிறுதானிய பயிர்களான குதிரைவாலி, ராகி, சோளம், கம்பு உள்ளிட்ட பயிர்களும் இடம் பெற்றிருந்தன. மேலும், சிறுதானிய வகைகளான கொள்ளு, கம்பு, திணை, சிகப்பு அரிசி, மூங்கில் அரிசி உள்ளிட்டவைகளும் இடம் பெற்றிருந்தன. கீரை வகை களின் விதைகள், காய்கறி களின் விதைகளும் வைக்கப் பட்டிருந்தன. இதனை பொது மக்கள் மற்றும் அரசு ஊழி யர்கள் வாங்கி சென்றனர்.
மதுபான சந்து கடைகள் பெருகி வருகிறது குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்
நாமக்கல், ஜூன் 30- நாமக்கல் மாவட்டத்தில் மதுபான சந்து கடைகள், புகையிலைப் பொருட்கள், லாட்டரி சீட்டுகள் விற்பனை அதிகம் நடை பெறுவதாக விவசாயிகள் குறைதீர் கூட் டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், ஆட்சியர் ச.உமா தலைமையில் வெள்ளியன்று நடைபெற்றது. கடந்த கூட்டத்தில் பெற்ற மனுக்களின் தற் போதைய நிலை குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அப்போது, அரசு மது பான கடைகளுக்கு அருகில் சந்து கடை கள் அதிகம் உள்ளதாக விவசாயிகள் தெரி வித்த கருத்துக்கு, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜூ, 300க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள தாகவும், 36 பேர் கைது செய்யப்பட்டுள்ள தாகவும், தற்போது சந்து கடைகள் ஏதும் இல்லை என தெரிவித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேசுகையில், காவல்துறை தெரிவித்தது போல் சந்துக் கடைகள் எண்ணிக்கை எதுவும் குறைக்கப் படவில்லை. தொடர்ந்து அதிகரித்த வண் ணமே உள்ளது. அதுமட்டுமன்றி லாட்டரி சீட்டு விற்பனையும் அதிக அளவில் நடைபெறு கிறது, என்றார். இதேபோல் விவசாயிகளும் புகை யிலை பொருட்கள் விற்பனை அதிகம் நடை பெறுவதாகவும், அதுகுறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தால் தங்க ளுக்கு மிரட்டல் வருவதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். உடனடியாக, விவசாயிகள் குற்றச்சாட்டுகளை தீர்ப்ப தற்கான நடவடிக்கைகளை மேற்கொள் ளுமாறு ஆட்சியர், காவல் துறை அதிகாரி களிடம் அறிவுறுத்தினார். தொடர்ந்து விவ சாயிகள் கோரிக்கைகள் தொடர்பாக பல் வேறு விவாதங்கள் நடைபெற்றன.
சேலம் பெரியார் பல்கலை., துணைவேந்தர், பதிவாளர் மீது புகார்
சேலம், ஜூன் 30- சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டம ளிப்பு விழாவில் கருப்பு நிற ஆடை கட்டுப்பாடு தொடர்பாக காவல் துறையினரின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் சுற்றறிக்கை வெளி யிட்ட துணைவேந்தர் மற்றும் பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 21 ஆவது பட்டமளிப்பு விழாவையொட்டி, பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில் வெளி யிடப்பட்ட சுற்றறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநர் பங்கேற்கும் இந்த விழாவிற்கு வருபவர்கள் கருப்பு நிற ஆடை கள் அணிவதை தவிர்க்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. காவல் துறையினரின் அறிவுறுத்தலின்படி, இந்த சுற்றறிக்கை அனுப்பப்படுவதாகவும் பல் கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில் தெரி விக்கப்பட்டு இருந்தது. பெரியார் பல்கலைக் கழக நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரி வித்தனர். இதையடுத்து பட்டமளிப்பு விழா விற்கு முந்தைய நாள் இந்த உத்தரவு திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே சேலம் மாவட்ட காவல்துறை மற்றும் மாநகர காவல்துறை சார்பில் அடுத்தடுத்து ஒரு விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் காவல்துறை சார்பில் இது போன்றதொரு எந்தவிதமான அறிவுறுத்தலும் வழங்கப் படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டி ருந்தது. இதனிடையே பட்டமளிப்பு விழாவும் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. இதனை அடுத்து காவல் துறை யினரின் மாண்பை சீர்குலைக்கும் வகை யில் சுற்றறிக்கை வெளியிட்ட பெரியார் பல் கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் பதிவாளர் தங்கவேல் ஆகியோர் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க வலியு றுத்தி பல்கலைக்கழக தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும், சுற்றறிக்கை வெளி யிட்ட இருவர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
தெரு நாய்கள் கடித்து கால்நடைகள் பலி நடவடிக்கை எடுக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை
தெரு நாய்கள் கடித்து கால்நடைகள் பலி நடவடிக்கை எடுக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை திருப்பூர், ஜூன் 30- விவசாயிகளின் கால்நடைகளை தெரு நாய்கள் கடித்து கொல்வதால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங் கம் திருப்பூர் வடக்கு ஒன்றியம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் திருப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.அன்புசாமி அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது, திருப்பூர் மாவட்டத்தில் கிராம பகுதிகளில், தெரு நாய்கள் நாளைக்கு நாள் அதிகரித்து கூட்டம் கூட்டமாக சென்று மாட்டின் இளங்கன்றுகள், ஆடுகள், கோழிகளை கடித் துக் கொன்று விடுகின்றன. சிறுவர் முதல் பெரியவர் வரை கடித்து விடுகிறது. மேலும், தோட்டங்களில் புகுந்து ஆட்டுப் பட்டிகளில் உள்ள ஆடுகளை கடித்துக் கொன்று விடுகிறது. இதனால் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பொருளா தார மற்றும் வாழ்வாதாரம் பாதித்து ஏற்படுகிறது. இதனால் விவசாயிகளையும் பொதுமக்களையும் தெரு நாய் கடிப்பதி லிருந்து பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பல பகுதிகளில் விவசாயிகளின் விலை நிலங்களில் பயிரிடும் பல வகையான காய்கள், பழங்கள், செடிகளை மயில்கள் கொத்தி சேதப்படுத்துகின்றன. மேலும், மயில்கள் மின்சார கம்பிகளில் பட்டு இறந்து விட்டால் விவசாய நிலங்களில் உள்ளவர்களோ அல்லது அருகாமை நிலங்களில் உள்ளவர்களோ காவல்துறை மற்றும் வனத்துறையினரால் சட்ட நடவடிக்கைக்கு உள் ளாக்கப்படுகின்றனர். இதனால் விவசாயிகலின் வாழ்வாதா ரம் பாதித்து அடைகிறது. இது போல மான்கள் விவசாய பயிர்களை கடித்து சேதப்படுத்துகின்றன. இந்த பாதிப்பி லிருந்து விவசாயிகளை பாதுகாக்க வனதுறையினர் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மருந்து கடை பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாஸ்மாக் மேற்பார்வையாளர்
தாராபுரம், ஜூன் 29 - தாராபுரத்தில் மருந்து கடை பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர். தாராபுரம், தேவேந்திரர் தெருவை சேர்ந்த 22 வயதான இளம்பெண் தாராபுரம் சர்ச் சாலையில் உள்ள முருகன் என்பவருக்கு சொந்தமான மருந்து கடையில் வேலை பார்த்து வருகிறார். கடையின் உரிமையாளர் முருகன் வெளியே சென்றிருந்த நிலையில், கடைக்கு முருகனின் நண்பரான தளவாய்பட்டிணத்தை சேர்ந்த பார்த்தீபன் (45) என்பவர் வந்தார். அப்போது கடையில் இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்பெண்ணும் பார்த்தீபனுக்கு மிடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் தாராபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் தன்னை பார்த் தீபன் ஆபாசமாக பேசியதாகவும், பாலியல் தொந்தரவு செய்ததாகவும் கூறியுள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட காவல் உதவி ஆய்வாளர் பத்மபிரியா பார்த்தீபன் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடையில் பார்த்தீபன் தலைமறை வாகிவிட்டார். தலைமறைவான பார்த்தீபன் தாராபுரம் பூள வாடி சாலையில் உள்ள தேர்பாதை டாஸ்மாக் கடையில் சூப் பர்வைசராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக் கது.
தமிழக ஆளுநரை திரும்ப பெற கோரி கையெழுத்து இயக்கம்
திருப்பூர், ஜூன் 30- தமிழக ஆளுநரை திரும்பப்பெற கோரி மதிமுக சார்பில் திருப்பூர் பெரிய பள்ளிவாசல் பகுதியில் கையெழுத்து இயக்கம் நடத் தப்பட்டது. மதிமுக சார்பில் தமிழ கம் முழுவதும் தமிழக ஆளு நரை திரும்ப பெற வேண்டு மென வலியுறுத்தி பொது மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வரு கிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகர மாவட்ட மறு மலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக திருப்பூர் பெரிய பள்ளி வாசல் பகுதி யில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
ரூ.6 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை
திருப்பூர், ஜூன் 30- வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூட்டத்தில் நடைபெற்ற சூரியகாந்தி ஏலத்தில் ரூ.6 லட்சத்து 32 ஆயிரத்து 279க்கு வணிகம் நடைபெற்றது. இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு மாவட்ட விவ சாயிகள் 24 பேர் கலந்து கொண்டு 13 ஆயிரத்து 767 கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், ஈரோடு பகு தியை சேர்ந்த 5 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ சூரி யகாந்தி விதையை அதிகபட்சமாக ரூ.49.69க்கும், குறைந் தபட்சம் ரூ.41.49க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று மொத் தம் ரூ.6 லட்சத்து 32ஆயிரத்து 279க்கு வணிகம் நடை பெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற் பனைக்கூட கண்காணிப்பாளர் சி.மகுடேஸ்வரன் தெரிவித் துள்ளார்.
ஆற்றில் சிக்கிய சிறுவன் மீட்பு
உதகை, ஜூன் 30- நீலகிரி மாவட்டம், கூட லூர் மற்றும் அதன் சுற்றுவட் டார பகுதிகளில் கனமழை பெய்தது. பல பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்நி லையில், பந்தலூர் அத்திக் குன்னா பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஆறு களில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டது. குறிப்பாக, அத்திக் குன்னா பகுதியில் ஆற்றில் குளிக்கச்சென்ற அசாம் மாநி லத்தைச் சேர்ந்த சாபிக் (7) என்ற சிறுவன் வெள்ளத்தில் சிக்கினார். அப்போது அரு கில் இருந்தவர்கள் கூச்சலி டவே, அப்பகுதியிலிருந்த ராணுவ வீரர் ஜோமஸ் உடனே ஆற்றில் குதித்து சிறு வனை மீட்டு கரைக்கு தூக்கி வந்தார். சிறுவனைக் காப் பாற்றிய ராணுவ வீரருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட் டுகளை தெரிவித்தனர்.
21 ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து சேவை
கோவை, ஜூன் 30- இலுப்பநத்தம் அருகே 21 ஆண்டுகளுக்கு பிறகு அரசு பேருந்து போக்குவரத்து சேவை துவங்கப்பட்டுள்ளதால், அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள இலுப்பநத்தம் ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. இதில் 6 ஆவது வார்டுக்குட்பட்ட பகுதியில் எஸ்.மேடூர், காரனூர், ராமேகவுண்டபுதூர், இலுப்பநத்தம், திம்மனூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள் ளன. இதில் எஸ்.புங்கம்பாளையம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி கடந்த 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மேற்கண்ட கிராமங்களில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலை வில் உள்ள இப்பள்ளிக்கு தினசரி 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காலை, மாலை நேரங்களில் நடந்து சென்று கல்வி பயின்று வந்தனர். எனவே, தினசரி காலை புளியம்பட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு செல்லும் அரசு பேருந்து மேலூர் பிரிவிலிருந்து மாதப்பன் நகர் வழியாக எஸ்.புங்கம் பாளையத்தில் உள்ள அரசுப்பள்ளி வழியாக செல்ல வேண்டு மென அப்பகுதி வார்டு உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் வந்தனர். அதன் பலனாக எஸ்.புங்கம்பாளையத்துக்கு வெள்ளியன்று முதல் அரசு பேருந்து சேவை தொடங்கியது. புளியம்பட்டி பேருந்து நிலையத்தில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்படும் 10 ஏ என்ற அரசு பேருந்து. 8.40 மணிக்கு எஸ்.மேடூர் பிரிவுக்கு வந்தது. அங்கிருந்து மாதப்பன் நகர் வழியாக எஸ்.புங்கம்பாளையம் அரசுப்பள்ளியை சென்ற டைந்து, பின்னர் அங்கிருந்து மேட்டுப்பாளையம் சென்றது. இவ்வழியாக 21 ஆண்டுகளுக்கு பின்பு வெள்ளியன்று போக் குவரத்து சேவை தொடங்கியதால் மாணவ, மாணவிகள் மட்டு மல்லாமல் பெற்றோர்கள், உள்ளூர் மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடன் தொல்லை: தொழிலாளி தற்கொலை
தருமபுரி, ஜூன் 30- தருமபுரியில் கடன் தொல்லையால் தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தருமபுரி மாவட்டம், நரசையர்குளம் பகுதியைச் சேர்ந்த வர் ஜெயவேல். கூலித்தொழிலாளியான இவருக்கு பழனி யம்மாள் என்ற மனைவியும், 15 வயது யுவராஜ் என்ற மக னும், 13 வயதுடைய அனுஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். ஜெய வேல் தருமபுரியில் உள்ள ஒரு தனியார் ஸ்கேன் சென்டரில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், ஜெயவேல் குடும்ப சூழ்நிலை காரணமாக தருமபுரியில் இயங்கி வரும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் 80 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். 24 மாத காலத்தில் தவணையாக செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் 20 மாதங்கள் கடனை திருப்பி செலுத்திய நிலையில், மீதம் 4 மாத கடனை திருப்பி செலுத்தவில்லை. இதனால் அந்த நிதி நிறுவனம் நெருக்கடி கொடுத்து வந்துள்ளது. இதனால் மனவேதனை அடைந்த ஜெயவேல், வியாழனன்று வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டுள்ள னர். ஆனால், அதற்குள் ஜெயவேல் மரணமடைந்தார். இத னால் ஆவேசமடைந்த அப்பகுதி பொதுமக்கள் அங்கிருந்த நிதி நிறுவன ஊழியர்களை பிடித்து, தருமபுரி நகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் ஜெயவேலுவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், 2 பெண்கள் உட்பட 4 நிதி நிறுவன ஊழியர்களை காவல் துறையினரிடம் ஜெயவேலுவின் உறவினர்கள் ஒப்படைத்த னர். தொடர்ந்து நிதி நிறுவன ஊழியர்களிடம் காவல் துறையி னர் விசாரணை மேற்கொண்டு வருவதோடு, தப்பி ஓடிய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.