districts

img

ரயில்வே ஊழியர்களின் குடியிருப்பின் அவல நிலை ரயில்வே நிர்வாகம் தலையிட கோரிக்கை

ஈரோடு, ஏப்.26- ஈரோட்டில் சிதிலமடைந்துகிடக்கும் ரயில் ஊழியர்க ளின் குடியிருப்புகளை  சீரமைக்க ரயில்வே ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு நகரின் மையப்பகுதியில் ரயில்வே ஊழியர்க ளின் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு 600க்கும் மேற் பட்ட வீடுகள்  அமைந்துள்ளன.  இக்குடியிருப்புகளில் தண் ணீர், மின்சாரம் மற்றும் சாலை வசதிகள் முறையாக அமைக் கப்பட்டுள்ளன. அதேநேரம், கடந்த சில வருடங்களாக  காலி செய்யப்பட்ட குடியிருப்புகளில் மீண்டும் குடியமர்த் தப்படாததாலும், முறையாக பராமரிக்கப்படாததாலும் அக் டியிருப்புகள் அனைத்தும் புதர்மண்டி சிதிலமடைந்து காணப்படுகிறது. இவை பாம்புகள் மற்றும்  விச பூச்சி களுக்கு மட்டுமல்ல, சமூக விரோதிகளுக்கும் புகழிட மாக மாறிவிட்டது.   இதுகுறித்து, ரயில்வே ஊழியர்களிடம் கேட்டபோது, வாடகை பிரச்சனை, வீட்டு வாடகைப்படி உயர்வு, வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள விகிதாச்சாரமும் வெளிச் சந்தையை விட மிக உயர்வாக இருப்பதால் தான் குடியி ருப்பை காலி செய்துவிட்டு, வெளியே வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருவதாக தெரிவித்தனர். 1930 இல் இருந்து இருக்கும் இந்த குடியிருப்பு பகுதி தற்போது சிதில மடைந்து போவதை பார்க்கும் போது மன வருத்தம ளிக்கிறது. எனவே, ரயில்வே நிர்வாகம் இப்பிரச்சனையில் உடனடி கவனம் செலுத்தி, குடியிருப்பு பகுதியை உயிர்ப் பிக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பம் ஆகும் என்றனர்.