districts

img

புறம்போக்கு நிலத்தில் இருந்து விவசாயிகளை அகற்ற முயற்சி

பென்னாகரம், ஜன.30- பென்னாகரம் அருகே 100 ஆண்டுக ளுக்கு மேலாக விவசாயம் செய்து வரும் புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வழங்க அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத் துள்ளனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட் டம், சின்னம்பள்ளி பகுதி, ஜீவா நகரில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இதில் ஏழு குடும்பங்கள் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்து வருகின்றனர். இதில் பலர் கணவனை இழந்த பெண்கள், முதியவர்கள் என பலர் விவசாயம் செய்து  தங்களது வாழ்க்கையை நடத்தி வரு கின்றனர். இந்நிலத்தில் மஞ்சள், வாழை,  நெல் போன்ற பயிர்கள் தொடர்ந்து விளை வித்து வருகின்றனர். ஆனால், சுமார் இரண் டாண்டுகாலமாக அரசு அதிகாரிகள் அவர் களை உடனடியாக அப்பகுதியிலிருந்து  காலி செய்ய வேண்டும் என தொடர்ந்து மிரட்டிவருகின்றனர். கடந்த சில மாதங்க ளுக்குமுன்பு ஜேசிபி உள்ளிட்ட இயந்தி ரங்களோடு அங்கு சென்று, விளை நிலங்க ளில் புகுந்து, விவசாயத்தை அழித்து நிலத்தை மீட்போம் என அதிகாரிகள் கூறி னர். ஆனால், அங்கு இருந்த விவசாயிகள் ஒன்றுகூடி அதனை தடுத்து நிறுத்தினர். இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநிலச் செயலாளரும், முன் னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.டில்லி பாபு உள்ளிட்ட தலைவர்களிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டனர். இதையடுத்து பி. டில்லிபாபு நேரில் சென்று ஆய்வு மேற் கொண்டார். மேலும், சம்பந்தப்பட்ட அதி காரிகளிடம் இதுகுறித்து கேட்டு, தங்க ளுக்கு உரிய உரிமைகளை பெற்றுத்தர நட வடிக்கை எடுக்கப்படும், என்றார். முன்னதாக, இந்த ஆய்வின்போது மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.மாதன், இரா.சிசுபாலன், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கே. என்.மல்லையன், மாவட்ட துணைச் செயலா ளர் கே.அன்பு, சிபிஎம் சின்னம்பள்ளி பகுதி செயலாளர் ஜி.சக்திவேல் ஆகியோர் உடனி ருந்தனர்.