districts

img

தனியார் ஆக்கிரமித்துள்ள ஜம்புக்கல் மலைப் பகுதியை மலைவாழ் மக்கள் குடியிருப்பாக மாற்ற கோரிக்கை

உடுமலை, மே 3 - உடுமலை அருகே உள்ள ஜம்புக் கல் மலையை பாதுகாக்கப்பட்ட இட மாக வகை மாற்றம் செய்து வனத் துறை கட்டுப்பாடில் எடுத்து மலை வாழ் மக்கள் வாழ்விடமாக மாற்று மாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தினர் கோரிக்கை வைத்துள்ளனர். உடுமலை வட்டம், ஆண்டியக வுண்டனூர் ஊராட்சியில் 1970ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் மலைப்பகுதியில் இருந்த சுமார் 2920  ஏக்கர் பரப்பளவு சமதள நிலத்தை விவசாய பயன்பாட்டிற்கு 300 குடும் பத்திற்கு 0.50 சென்ட் முதல் 2.20  ஏக்கர் வரை நிபந்தனை பட்டா வழங்க பட்டது. பின்னர் பல ஆண்டுகள் மழை யில்லாமல் போனதால் ஜம்புக்கல் மலை பகுதியில் இருந்து விவசாயி கள் வெளியேறிதை பயன்படுத்தி தனியார் சிலர் தம்முடைய பெயரி லும், தமது குடும்பத்தின் பெயரில்  ஆவணம் தயாரித்து ஆக்கிரப்பு செய் துள்ளனர். அப்பகுதி விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் சார்பில் தமிழக முதல்வர், வருவாய்த் துறை, வனத்துறை அதி காரிகளுக்கு இது குறித்து மனு அளித் துள்ளனர். பல கட்ட போராட்டம் நடத் தியும் தற்பொழுது வரை மலைப் பகு தியில் இருக்கும் தனிநபர் ஆக்கிரப்பு கள் அகற்றப்படவில்லை. தற்பொ ழுது வருவாய்த் துறையின் கட்டுப் பாட்டில் இருக்கும் இந்த மலைப்பகு தியை பாதுகாக்கப்பட்ட வனத்துறை யாக வகை மாற்றம் செய்து அமராவதி பகுதியில் இருக்கும் மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதி யாக மாற்ற வேண்டும் என்று தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை  வைத்துள்ளது. இது குறித்து விவசாயிகள் சங்க  மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூ தனன் உடுமலை வருவாய் கோட்டாட் சியரிடம் கோரிக்கை மனு அளித்துள் ளார்.