மேட்டுப்பாளையம், ஆக.27- மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை மற்றும் கோத்தகிரி செல்லும் மலைச்சாலைகளில் மழைக்காலங்க ளில் ஏற்பட்டு வரும் மண் சரிவுகளை தடுக்க கூடுதல் கம்பி வலை அமைத்து அதில் கற்களை அடுக்கி சுவர் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேட்டுப்பாளையம் – உதகை இடையே மலைப்பாதையில் கடந்த 2009 ஆம் ஆண்டு பெய்த கனமழை யால் பல இடங்களில் பெரிய அள வில் மண் மற்றும் பாறைகள் சரிந்து சாலை போக்குவரத்து சுமார் இரண்டு மாதங்கள் வரை துண்டிக்கப்பட்டது. அப்போது தேசிய நெடுஞ்சாலை துறையினர் மேட்டுப்பாளையம் - உதகை சாலையை சீரமைத்த னர். மேலும், மண் சரிவுகள் ஏற்படும் இடங்களை தேர்வு செய்து அப்பகுதி களில் சாலையோரங்களில் பெரிய கூண்டு போல் வலுவான இரும்பு கம்பி வலை அமைத்து, கனமான கருங்கற்களை அடுக்கி சுவர் அமைத் தனர். மேட்டுப்பாளையம் மலையடி வார பகுதியான கல்லார் முதல் பர்லியார் வரை மட்டும் ஆறு இடங்க ளில் இச்சுவர் அமைக்கப்பட்டது. இதனால், மேலிருந்து கீழ் நோக்கி வரும் மழை நீர் கூண்டு சுவற்றின் இடைவெளி வழியே வழிந்து சென்ற தால் மண் சரிவுகள் தடுக்கப்பட்டன. இம்முயற்சி பெரிய அளவில் பலனளித்து கடந்த 15 ஆண்டுகளாக இக்கற்சுவர் உள்ள இடங்களில் மண்சரிவுகள் ஏற்படவில்லை. இந்நிலையில், கடந்த சில மாதங் களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் பகுதியில் பெய்த கனமழையால் மேட்டுப்பாளையம்-உதகை மற்றும் மேட்டுப்பாளையம்-கோத்தகிரி இடையிலான சாலைகளில் பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பெரும் சிரமங்களுக்கிடையே சீர மைப்பு பணிகள் நடந்த நிலை யில், கடந்த 2009 ஆம் ஆண்டு ஏற்பட்ட மண்சரிவுகளின் போது கட்டப்பட்டது போன்று இந்த இருமலைச்சா லைகளிலும் மழைக்கால மண்சரிவு களை தடுக்கும் வகையில் நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளை மண்வள வல்லுனர்கள் மூலம் கண்ட றிந்து கூடுதல் இடங்களில் இரும்பு கம்பி வலை கற்சுவர்களை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து தேசிய நெடுஞ்சா லைத்துறை அதிகாரிகளிடம் கேட் கையில், மண் சரிவு தடுப்பு சுவர்களை கூடுதல் இடங்களில் புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்ப டும், அதற்கான அனுமதியை பெறும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின் றன, என்றனர்.