districts

img

குடிசை மாற்று வாரியத்தால் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை ஒதுக்க கோரிக்கை

உடுமலை, ஜன.9-  உடுமலையில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை விரைவில் பயனாளிகளுக்கு  ஒதுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர். உடுமலை தாலுகா, புக்குளம் பகுதியில் கடந்த 2018 ஆம்  ஆண்டு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, தமிழ் நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் 320 வீடுகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் கட்டும் வேலைகள் தொடங் கப்பட்டது. இதையடுத்து கடந்த 04.02.2021 ஆம் தேதியன்று  கட்டிட வேலைகள் முடித்து மக்கள் பயன்பாட்டிக்கு திறக்க பட்டது. ஆனால், திறக்கப்பட்டு பல மாதங்களாகியும் தற்போது வரை பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து பயனாளிகள் கூறுகையில், உடுமலை  நகராட்சி, தங்கமாள் ஓடைகரையின் ஓரத்தில் இருந்த மக்களை ஆக்கிரப்பு என்ற பெயரிலும், இப்பகுதி மக்க ளுக்கு புக்குளம் பகுதியில் புதிய அடுக்குமாடி கட்டிடத்தில் வீடு ஒதுக்கபட்டு உள்ளது என கூறி அப்பகுதியில் இருந்து  எங்களை வெளியேற்றினர். ஆனால், தற்போது வரை  வீடுகளை எங்களுக்கு தரவில்லை. எங்களுக்கு ஒதுக்கிய  வீடுகளை விரைவில் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும், என்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, பொது மக்கள் குடியிருக்கும் வீடுகளின் கட்டுமான பணிகள் மட் டுமே முடித்துவுள்ளது. இன்னும் பூங்கா, திருமண மண்டபம்  உள்ளிட்ட கட்டுமான வேலைகள் மீதம் உள்ளதால், அதற் கான வேலைகள் நடைபெற்று வருகிறது. அனைத்து வீடுக ளுக்கும் பயனாளிகள் தேர்வும் இன்னும் முடியவில்லை. விரைவில் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.