திருப்பூர், மே 8- அங்கன்வாடி மையங்களில் பயன்படுத்தப்படும் சமையல் எரி வாயு சிலிண்டருக்கு உரிய முழுத் தொகையை அரசு வழங்க வேண் டும் என்று அங்கன்வாடி ஊழியர் மற் றும் உதவியாளர் சங்கத்தின் திருப் பூர் ஒன்றிய 4 ஆவது மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது. திருப்பூர் கே.எஸ்.ஆர். திருமண மண்டபத்தில் அங்கன்வாடி ஊழி யர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் ஒன்றிய மாநாடு சனியன்று ஒன்றியத் தலைவர் ஆர்.வனிதாமணி தலை மையில் நடைபெற்றது. இம்மாநாட் டில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ச.மணிமேகலை வரவேற்றார். சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ரங் கராஜ் மாநாட்டைத் தொடக்கி வைத் துப் பேசினார். இதில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநி லச் செயலாளர் அ.நிசார் அகமது, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.மைதிலி, கட்டுமானத் தொழி லாளர் சம்மேளன மாநிலப் பொதுச் செயலாளர் டி.குமார் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். அங்கன்வாடி சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.எல்லம்மாள், மாவட்ட தலைவர் டி.சித்ரா, துணைத் தலைவர் எஸ்.ரகமத்துன்னிசா ஆகியோர் சங்கத்தின் செயல்பாடு, அமைப்பு குறித்து உரையாற்றினர். இம்மாநாட்டில் அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்கி அரசு ஊழி யர்களாக அறிவிக்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9000 ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண் டும், பணிக்கொடை ஊழியர்க ளுக்கு ரூ.10 லட்சம், உதவியாளர் களுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண் டும், விலைவாசி உயர்வைக் கட்டுப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு திருப்பூர் ஒன்றியத் தலைவராக ஆ.வனிதாமணி, செயலாளராக மு. ஜூலி, பொருளாளராக வெ.கலை வாணி, மாவட்ட செயற்குழு உறுப் பினராக மு.வேலுமணி, துணைத் தலைவர்களாக ம.கவிதா, ச.மணி மேகலை, ம.பரிமளா, மு.வே.சுகுணா, பேபி ஆகியோரும், துணைச் செயலாளர்களாக புனித வதி, சு.உமாமகேஸ்வரி, ஜெ.மரி யம், ரேவதி, சரஸ்வதி ஆகியோ ரும் தேர்வு செய்யப்பட்டனர். இதன் பின், மாநாட்டை நிறைவு செய்து வைத்து மாநிலத் துணைத் தலைவர் எம்.பாக்கியம் உரையாற்றினார். இம்மாநாட்டில் ஒன்றியம் முழுவ தும் இருந்து இருநூறுக்கும் மேற் பட்ட அங்கன்வாடி ஊழியர்கள், உத வியாளர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக, ஒன்றியப் பொருளாளர் வெ.கலைவாணி நன்றி கூறினார்.