districts

img

குடியரசு தின அணிவகுப்பு: அரசு கல்லூரி மாணவர் தேர்வு

திருப்பூர், ஜன.17- குடியரசு தின அணிவ குப்பில் பங்கேற்க சிக் கண்ணா அரசு கலைக் கல் லூரி நாட்டு நலப்பணித் திட்ட  மாணவர் தேர்வு செய்யப்பட் டுள்ளார். சென்னையில் ஜன.26 ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு தமிழ் நாடு முதல்வர் தலைமை யில் மெரினா கடற்கரை சாலையில் நடைபெற உள்ளது. அதில்  கலந்து கொள்ள மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலைக்  கழகத்திலிருந்து 120 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட் டுள்ளனர். அதில் பாரதியார் பல்கலை கழகத்தில் இருந்து மொத்தம் ஒன்பது மாணவ, மாணவியர் தேர்வாகி உள்ளனர்.  அதில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு  நலப்பணித் திட்டம் அலகு-2 மாணவன் செர்லின் (வரலாறு துறை) தேர்வாகி உள்ளார். இவர் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தேர்வான ஒரே ஒரு மாணவன் என்பது குறிப்பிடத் தக்கது. தேர்வான மாணவனை கல்லூரி முதல்வர் கிருஷ் ணன், அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், பேராசிரி யர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் வழியனுப்பி வைத்த னர்.