districts

img

பழுதடைந்த சாலைகளை சீரமைத்திடுக

தருமபுரி, ஜூன் 23- பாலக்கோடு பேரூ ராட்சியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க  கோரி, மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.  பாலக்கோடு பேருந்து நிலையத்தை புதுப்பித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். பாலக்கோடு காந்தி மைதானம் முதல் கல்கூடப்பட்டி புதிய மேம்பாலம் வரை, பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், பாலக்கோடு வட்டாட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு வட்ட செயலாளர் டி.எஸ்.ராமச் சந்திரன் தலைமை ஏற்றார். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.நாகராசன் ஆகியோர் உரை யாற்றினர். இதில், வட்டக்குழு உறுப்பினர் கள் ஆறுமுகம், பி.முருகன், ஜி.பாண்டியம் மாள், சி.கலாவதி, பி.காரல் மார்க்ஸ், என். வரதராஜன் உள்ளிட்ட திரளானோர் பங் கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப் பினர்.