சேலம், ஜன.24- சேலத்தில் ரூ.52 கோடி மதிப்பீட்டில் 3 ஏரிகள் புனரமைப்பு பணிகள் நடை பெற்று வருகிறதென மாநகராட்சி ஆணையர் சீ.பாலச்சந்தர் தெரிவித்துள் ளார். சேலம் மாநகராட்சிக்குட்பட்ட போடி நாயக்கன்பட்டி ஏரியை புனரமைத்து அழகுபடுத்தும் பணி மற்றும் சூரமங்க லம் ரெட்டியூர் மாரியம்மன் கோவிலி லிருந்து குரங்குச்சாவடி சந்தைக்குச் செல்லும் சாலைப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் சீ.பாலச் சந்தர் கூறுகையில், சேலத்தில் நிலத்தடி நீரை மேம்படுத்தும் வகையில் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர் வாரி, நீர்ப்பிடிப்பு திறனை அதிகரிக்கச் செய்யும் வகையில் பல்வேறு நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. அந்த வகையில், சேலம் மாநக ராட்சியில் போடிநாயக்கன்பட்டி ஏரி, அல்லிக்குட்டை ஏரி மற்றும் மூக்கனேரி ஆகிய நீர்நிலைகளில் ரூ.52 கோடி மதிப்பில் புனரமைக்கும் பணிகள் தற் போது சராசரியாக 50 சதவிகிதம் முடிவடைந்துள்ளன. போடிநாயக்கன் பட்டி ஏரியானது பழைய சூரமங்கலம் கிராமம் மற்றும் ஜே.ஜே.நகர் ஆகிய பகு திகளை உள்ளடக்கி 20.25 ஏக்கர் பரப் பளவில் அமைந்துள்ளது. போடி நாயக்கன்பட்டி ஏரியை புனரமைத்து அழகுபடுத்துவதற்கு உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ.19 கோடி தமிழக அரசால் வழங்கப்பட் டுள்ளது, என்றார். மேலும், பொதுமக்களின் அடிப்ப டைத் தேவைகளில் ஒன்றான சாலை வச தியை மேம்படுத்தும் வகையில் சேலம் மாநகராட்சியில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ், 123.496 கி.மீ. நீளத்துக்கு ரூ.59.13 கோடி மதிப்பீட்டில் 759 எண்ணிக்கையிலான சாலை மறுசீரமைப்புப் பணிகளும், நகர்ப்புற சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் 55 கி.மீ. நீளத்துக்கு ரூ.18.84 கோடி மதிப்பீட்டில் 346 எண்ணிக்கையிலான சேதமடைந்த சாலைகள் மறுசீரமைப் புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள் ளன. மேலும், மாநில நிதிக்குழு மானி யத்தின் கீழ் ரூ.25.37 கோடி மதிப்பீட் டில் 427 சாலைகள் 48.184 கி.மீ. நீளத் திற்கு மறுசீரமைப்புப் பணிகளும், 15 ஆவது மத்திய நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.26.79 கோடி மதிப்பீட்டில் 372 சாலைகள் 59.057 கி.மீ. நீளத்துக்கு மறுசீரமைப்புப் பணிகளும் மேற்கொள் ளப்பட்டுள்ளன. அந்த வகையில், ரெட்டி யூர் மாரியம்மன் கோயிலிலிருந்து குரங்குச்சாவடி சந்தைக்குச் செல்லும் சாலை சீரமைப்புப்பணி ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது, என்றார்.