districts

img

மலைரயில் பாதையில் கிடந்த நெகிழிப் பொருட்கள் அகற்றம்

மேட்டுப்பாளையம், பிப்.24- மேட்டுப்பாளையத்தில் உள்ள  மலை ரயில் இருப்பு பாதையோ ரம் சுற்றுலா பயணிகளால் வீசப் பட்ட பிளாஸ்டிக் மற்றும் சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் பொருட் களை அகற்றும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டனர்.  கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் இருந்து உத கைக்கு தினசரி உலக பாரம்ப ரிய சின்னமான நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த மலை ரயிலில் பயணித்த படி நீலகிரி மழையின் இயற்கை எழிலை கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பய ணிகள் ஆர்வமுடன் வருகை தரு கின்றனர். செங்குத்தான மலைக் காட்டின் நடுவே ஊடுருவி செல் லும் இம்மலை ரயிலில் பயணிக் கும் சில சுற்றுலா பயணிகள் தாங் கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் உணவு பண்டங்கள் அடைக்கப் பட்டிருக்கும் நெகிழி கவர்கள் போன்றவற்றை தடையை மீறி இருப்பு பாதையோரம் வீசி செல் கின்றனர். இதனால் மலையின் இயற்கை சூழல் கடுமையாக மாசு படுவதோடு, யானை உள்ளிட்ட வன உயிரினங்கள் இவற்றை உண்பதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழக்கும் சூழல் உரு வாகின்றது. அண்மையில், இது தொடர் பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வனத் தின் வழியே செல்லும் மலைரயில் இருப்பு பாதையில் யானை உள் ளிட்ட வன உயிரினங்கள் கடந்து செல்வதை தடுக்கும் வகையில் தடுப்புகள் ஏற்படுத்த கூடாது, இவற்றுக்கும் பாதிப்பு ஏற்படுத் தும் நெகிழி உள்ளிட்ட பொருட் களை அப்புறப்படுத்த வேண்டும்” என வனத்துறையினருக்கு உத் தரவிட்டது. இதன்படி வனத்துறை உயர் அதிகாரிகள் மலைரயில் பாதையை கடந்த சில தினங்க ளாக ஆய்வு செய்து யானைக ளின் வழிதட பாதையில் உள்ள தடுப்புகளை அகற்றும் பணி யினை முடுக்கிவிட்டுள்ளனர்.  இந்நிலையில், புதனன்று மேட் டுப்பாளையம் வனத்துறையினர் மற்றும் வனச்சரக அலுவலர் பணிக்கு தேர்வு பெற்று பயிற்சி யில் உள்ள கோவை வனக்கல் லூரி மாணவ, மாணவிகள் 50க்கும் மேற்பட்டோர் இணைந்து கோவை மாவட்ட எல்லை வரை உள்ள மலைரயில் பாதையோரம் கிடக் கும் அனைத்து வகை நெகிழி  பொருட்களையும் அப்புறப்படுத் தும் பணியில் ஈடுபட்டனர். மேலும், மலை மீதேறியும் பள்ளத்தாக்கின் மீது கட்டப்பட்டுள்ள பாலத்தை கடந்து சென்றும் இக்குழுவினர் சுற்றுலா பயணிகளால் வீசி எறி யப்பட்ட சுமார் 300 கிலோ நெகிழி பொருட்களை சேகரித்து அப்புறப் படுத்தினர். மேலும், வனம் மற்றும் வன உயிரினங்களுக்கு பாதிப்பை  ஏற்படுத்தும் வகையில் செயல்ப டும் சுற்றுலா பயணிகள் மீது வனச் சட்டபடி நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் எச்சரிக்கை விடுத் துள்ளனர்.