districts

img

சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த கரிதொட்டி ஆலைகள் அகற்றம் மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை

உடுமலை, ஏப்.1- மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனு மதியின்றியும், பொதுமக்களுக்கும், விவ சாய நிலங்களை பாழ்படுத்தும் வகையிலும் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த  இரண்டு தேங்காய் கரிதொட்டி ஆலைகளை இடித்து அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தர விட்டதன் பேரில் வெள்ளியன்று இடித்து அகற்றப்பட்டன. திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் அருகே உள்ள அப்பிலியப்பட்டி பூளவாடி கிராமங் களில் காற்று மற்றும் நீரினை மாசுபடுத்தும் விதமாக தேங்காய் தொட்டி சுடும் ஆலைகள் அரசு அனுமதியின்றி செயல்பட்டு வருவ தாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து  வருகிறது. குறிப்பாக, இந்த ஆலைகளிலி ருந்து வெளியேற்றப்படும் அதன் துகள்கள் காற்றில் பரவி மூச்சுத்திணறல் ஏற்படுவதாக வும், காற்று மற்றும் நீர் நிலைகளில் படித்து  விவசாயம் பாழ்பட்டு வருவதாகவும், சட்ட விரோதமாக செயல்படும் ஆலைகளை சீல் வைக்கக்கோரி அப்பகுதி விவசாயிகள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வருவாய் துறையினரிடம் தொடர்ச்சியாக புகார் மனு  அளித்து வந்தனர். இந்நிலையில், சட்டவிரோதமாக இயங்கி வரும் தேங்காய் கரி தொட்டி ஆலைகளை நிரந்தரமாக இடித்து அகற்றும் வரை உடு மலைப்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத் தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடை பெறும் என  விவசாயிகளால் அறிவிக்கப் பட்டிருந்தது. அதன்படி, கடந்த மாதம் விவ சாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் அலுவ லகத்தில் காத்திருப்பு போராட்டத்தை துவக் கினர்.

இதையடுத்து, வட்டாட்சியர் தலை மையில் உடுமலைப்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர், குடிமங்கலம் காவல் ஆய்வாளர் மற்றும் திருப்பூர் தெற்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர்  ஆகியோர்  விவசாயிகள் மற்றும் பொது மக்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து, வெள்ளியன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத் தில் கரிதொட்டி ஆலைகள் குறித்து விவ சாயிகள் குற்றச்சாட்டுகளை எழுப்பினர். இதன்பின், மாவட்ட ஆட்சியர் வினீத், பிரச்சனைக்குரிய இரண்டு கரித்தொட்டி  ஆலைகளையும் உடனடியாக இடிக்க அதி ரடி உத்தரவு பிறப்பித்தார்.மேலும், மீத முள்ள 4 ஆலைகளையும் இம்மாத இறுதிக் குள் அகற்றவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார். ஆட்சியரின் உத்தரவையடுத்து, வெள்ளி யன்று குடிமங்கலம் அருகே பூளவாடி மற் றும் அப்பிலியப்பட்டி கிராமங்களில் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக செயல் பட்டு வந்த இரண்டு தேங்காய் கரித்தொட்டி ஆலைகளில் இருந்த நிலத்தடி கரிசுடும் அமைப்புகள், தண்ணீர் தொட்டிகள் உள் ளிட்ட அனைத்து  கட்டுமானங்களும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.