கோவை, ஜூன் 29- ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக் காக கோவை மாவட்டம், குனியமுத் தூர், குறிச்சி குளக்கரையில் ஆக்கிர மிப்பு வீடுகளை மாநகராட்சி அதிகாரி கள் இடித்து அகற்றினார்கள். கோவை மாநகர பகுதியில் உக்க டம், பெரியகுளம், வாலாங்குளம், குறிச்சி குளம், செல்வ சிந்தாமணி குளம் உள்பட ஏராளமான குளங்கள் உள்ளன. அவை ஸ்மார்ட் சிட்டி திட் டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வரு கின்றன. இதற்காக குளக்கரைகளில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப் பட்டு வருகிறது. இந்நிலையில், குனி யமுத்தூர், குறிச்சி குளக்கரை காந்தி நகர் பகுதிகளில் 173 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற் காக இந்த வீடுகளை குடி இருந்தவர்க ளுக்கு மாற்று வீடுகள் வழங்க நடவ டிக்கை எடுக்கப்பட்டது. இதைத்தொ டர்ந்து ஆக்கிரமிப்பு வீடுகளில் வசிப் பவர்களுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு, மாநக ராட்சி அதிகாரிகள் பொக்லைன் எந்தி ரங்களுடன் அங்கு சென்றனர். ஆனால், குடியிருப்புவாசிகள் வீடுகளை காலி செய்ய மறுத்தனர். இதனால் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டி ருந்த ஏராளமான காவல் துறையி னர், குடியிருப்புவாசிகள் அப்புறப் படுத்தினர். இதன்பின் அந்த வீடு களின் மின் இணைப்புகள் துண்டிக் கப்பட்டு, பொக்லைன் எந்திரங்களில் உதவியுடன் ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதி காரிகள் கூறுகையில், குனியமுத் தூர் குறிச்சி குளக்கரையில் ஆக்கிர மிப்பு வீடுகளில் குடியிருந்து வருப வர்களுக்கு மாற்று வீடு வழங்கப் பட்டு விட்டது. இந்நிலையில், காவல் துறையினரின் பாதுகாப்புடன் மீதமி ருந்த கட்டிடங்கள் இடிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி முடிந்த பிறகு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளக்கரையை அழகுபடுத்தும் பணி நடைபெறும். இவ்வாறு அதிகாரி கள் கூறினர்.