திருப்பூர், மே 4 - தொலை நோக்கி உருவாக்கும் ஒரு நாள் பயிலரங்கம், தமிழ்நாடு அறிவி யல் இயக்கம் திருப்பூர் மாவட்டம் சார் பாக வியாழனன்று பெம் ஸ்கூல் ஆப் எக்ஸ்லென்ஸ் பள்ளியில் நடைபெற் றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆ. ஈசுவரன் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில், மாவட்டச் செயலாளர் கெளரிசங்கர் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட துணை தலைவர் ஸ்ரீராம்குமார் வாழ்த்தி பேசினார். தொலை நோக்கியின் வரலாறு, அதில் உள்ள பொருள்களின் விபரம், அதன் பயன்களைக்கூறி, எப்30070எம் ரக தொலை நோக்கியை பொருத்தும் பயிற் சியினை மதுரை கலிலியோ சைன்ஸ் மையத்தின் நிறுவனர் சத்தியமாணிக் கம் அளித்தார். திருப்பூர் மாவட்டத்தில், 13 பள்ளிகளில் இருந்து 26 ஆசிரியர் கள் கலந்து கொண்டனர். முடிவில், தமிழ் நாடு அறிவியல் இயக்க மாவட்ட பொருளாளர் கார்த்தி நன்றி கூறினார்.