அவிநாசி, செப். 22 – அவிநாசி பேரூராட்சி வியா பாரிகள், வணிகர்கள், தொழிற் சங்கத்தினர் ஆகியோர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் ஞாயிறன்று செயல்படும் சாலையோர வியாபாரிகள் கடைகளை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள் ளது. அவிநாசி பேரூராட்சியில் தனலட்சுமி பொன்னுச்சாமி தலைமையிலும், பேரூராட்சி செயல் அலுவ லர் இந்துமதி, பேரூராட்சி சுகாதாரத் அலுவ லர் கருப்புசாமி, கணக்கர் விஜயகுமார், காவல்துறையினர், நெடுஞ்சாலை துறையி னர் உள்ளிட்டோர்கள் முன்னிலையில், சாலையோர கடைகள் குறித்து வணிகர் சங்க நிர்வாகிகள், பேரூராட்சி கவுன்சிலர்கள், சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்க பிர திநிதிகள் ஆகியோர் கலந்து கொண்ட கருத்து கேட்பு கூட்டம் அவிநாசி பேரூராட்சி அலுவல கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படும் சாலையோர கடைகள் அவி நாசி வாரச்சந்தை வளாகத்திற்கு மாற்றம் செய்யப்படும். அதேபோல ஞாயிற்றுக் கிழமை வாரச்சந்தை வளாகத்தில் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் விற்க அனுமதி இல்லை.
தள்ளுவண்டியில் விற்பனை செய் யும், உணவுப் பொருட்கள் சாலையோரத் தில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் சம்பந்தப்பட்ட துறை மூலம் அனு மதி பெற்று நடத்துமாறும், வாரச்சந்தை வளா கத்தில் மாற்றிக் கொடுக்கப்படும், கடைக ளுக்கு தற்போது பேரூராட்சி மூலம் வசூலிக் கப்படும் கட்டணமே பேரூராட்சி நிர்வாகத் தின் மூலம் வசூலிக்கப்படும். வேளாண்துறையால் வழங்கப்பட்ட உழ வர் அட்டை வைத்திருக்கும் விவசாயிக ளுக்கு மட்டும் வேளாண்மை அலுவலக வளா கத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்படும். ஒலிபெ ருக்கி மூலம் விற்பனை செய்யும் வாகனங் களுக்கு அனுமதி இல்லை. தற்காலிகமாக அடையாள அட்டை அவிநாசி பேரூராட்சி அலுவலகத்தில் பதிவு செய்து சாலையோர வியாபாரிகள் பெற்றுக் கொள்ளலாம். சாலை யோர வியாபாரிகளை முறைப்படுத்த குழு அமைக்கப்படும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சிஐடியு பொதுத் தொழிலாளர் சங் கத்தின் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, தலைவர் ராஜன், நிர்வாகிகள் பழனிசாமி, சந்திரன், ஏஐ டியூசி சார்பில் நிர்வாகி பழனிசாமி, ஒன்றிய நிர்வாகிகள் கனகராஜ், நாசர், சண்முகம், கோபால், செல்வராஜ், பேரூராட்சி கவுன் சிலர் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன், பேரூராட்சி கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் ஏஐடியுசி பழனிச்சாமி, குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசுகையில், கவுன்சிலர் தங்கவேலுடன் வாக்குவாதம் ஏற்பட்டு பழனிசாமி ஒருமை யில் பேசியதாக கூறி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து பழனிச்சாமி ஒருமையில் பேசி யதற்கு வருத்தம் தெரிவித்தார். இதில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.