districts

img

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி

ஈரோடு, ஜுலை 20- பெருந்துறையில் நடைபெற்ற மண்டல மாநாட்டிற்கு வந்த போது விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நிவாரண நிதி வழங்கப்பட்டது. ஆணவக் கொலைகளைத் தடுக்க தனி சட்டம் இயற்ற  வலியுறுத்தி பெருந்துறையில் கடந்த ஆண்டு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் மண்டல மாநாடு நடத்தப் பட்டது. இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக புன்செய் புளியம்பட்டியிலிருந்து வந்த மூவர் விபத்திற்குள்ளாகினர். கடுமையான மற்றும் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று  வந்த நிலையில் தற்போது அவர்கள் நலம் பெற்றுள்ளனர்.அவர்களுக்கு விபத்து நிவாரண நிதி அளிக்கும் நிகழ்வு புளி யம்பட்டியில் நடைபெற்றது.  நிகழ்விற்கு மாவட்டத் தலைவர் பி.பி.பழனிசாமி தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் டி.செல்லக்கண்ணு விபத்து நிவாரண நிதியினை வழங்கினார். இதில் பாதிக்கப் பட்ட நீலிபாளையம் சீனிவாசனுக்கு ரூ.35 ஆயிரம், நொச்சி  குட்டை தங்கவேலுக்கு ரூ.20 ஆயிரம், பருசபாளையம் சுப்பிர மணிக்கு ரூ.20ஆயிரம் என விபத்து நிவாரண நிதி அளிக்கப் பட்டது.  இந்நிகழ்வில் மாநிலத் துணைத்தலைவர் யு.கே.சிவ ஞானம்,  திருப்பூர் மாவட்டச் செயலாளர் கனகராஜ், பவானி சாகர் ஒன்றியத் தலைவர் ஏ.பி.ராஜு, செயலாளர்  பி.ஜெக நாதன், ஆகியோர் கலந்து கொண்டனர்.