திருப்பூர், அக்.7 - உடுமலை பகுதிகளில் காய்ந்து வரும் தென்னை, கரும்பு உள்ளிட்ட பயிர் களை காப்பாற்ற உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.ஆர். மதுசூதனன், மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுக்கா, அமராவதி ஆற்றில் அமைந்துள்ள அணை மூலம் மடத்துக்குளம் தாலுக்கா, தாராபுரம் தாலுக்கா மற்றும் கரூர் பழைய வாய்க்கால் பாசனம் 25 ஆயிரம் ஏக்கர், புதிய கால்வாய் பாசனம் பெறும் பகுதியும் சேர்த்து 55 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது. இதன் மூலம் இம்மாவட்டங்களில் நிலத் தடி நீரும் பெருகி வருகிறது. ஆனால் அமராவதி அணைக்கு தென்மேற்கு பரு வமழை காலத்தில்தான் அதிகமான நீர் வரத்து கிடைத்து வந்துள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போது மான அளவு இல்லாததால், தேவை யான நீரைவிட மிக குறைந்த நீரே கிடைத் துள்ளது. இந்நிலையில் பாசனப்பகுதி யில் தென்னை மரங்கள், கரும்பு உட்பட பல பயிர்கள் நீர் பற்றாக்குறையால் காயும் நிலையில் உள்ளன. வடகிழக்கு பருவமழை துவங்க வேண்டிய காலத் தில் துவங்காததால் கடுமையான வறட்சி நிலவுகிறது. இப்பகுதிகளில் கால்நடைகளுக்கும், குடிநீர் தேவைக் கும் தண்ணீரை டிராக்டர்களிலும், லாரி களிலும் விலை கொடுத்து வாங்கி ஊற்றி வருகின்றனர். அமராவதி சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்த கரும்பு பயிர் களை காப்பாற்ற முடியுமா என்று தெரி யாத நிலை ஏற்பட்டுள்ளது. மேற்கா ணும் பயிர்களுக்கு உடனடியாக நீர் பாச னம் செய்ய வேண்டிய உள்ளது. எனவே அமராவதி அணையில் 65 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பதால், அந்த நீரை பயன்படுத்தி வறட்சி பாதிப்பை கட்டுப்படுத்த வேண்டும். புதிய ஆயக்கட்டுப் பகுதிகளுக்கும், பழைய பாசனப் பகுதிகளுக்கும் இருக் கும் நீரை பகிர்ந்து அளிக்க வேண்டும். அமராவதி ஆற்றில் குடிநீர் தேவைக் கென கடந்த காலங்களில் கூடுதலான தண்ணீர் திறப்பது நடைமுறையிலி ருந்து வந்துள்ளது. ஆற்றில் சட்டவிரோதமாக 1500க்கும் மேற்பட்ட பம்ப் செட்டுகள் உள்ளதால், பாசனம் பெற வேண்டிய பகுதிகள் பாதிப்புக்குள் ளாகிறது. இதைத் தடுத்து நிறுத்திட முறையான ஏற்பாடு செய்ய வேண் டும். புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கும், பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கும் சம மான அளவில் நீர் திறக்க வேண்டும். காலதாமதம் செய்யாமல் காய்ந்து வரும் நீண்ட கால பயிர்களான தென்னை, கரும்பு உள்ளிட்ட பயிர் களை காப்பாற்ற உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என கூறப்பட்டுள் ளது.