districts

img

திருமூர்த்தி அணையில் இருந்து நான்காவது மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

உடுமலை, செப்,.20 - பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத் தில், உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து  நான்காம் மண்டலப் பாசனத்திற்கு தண்ணீர்  திறந்துவிடப்பட்டது. உடுமலை திருமூர்த்தி அணை மூலம் பிஏபி பாசன திட்டத்தில், திருப்பூர்,  கோவை   மாவட்டங்களில் உள்ள 3.77  லட்சம் ஏக்கர்  நிலம் பாசன வசதி பெறுகின்றன. மேலும்,  உடுமலை நகராட்சி, உடுமலை, மடத்துக்கு ளம், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய பகுதிக ளுக்கு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப் பட்டு வருகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலை யில் அமைந்துள்ள இத்திட்டத் தொகுப்பு அணைகளிலிருந்து, 48.39 கி.மீ., தூரம் அடர்ந்த வனப்பகுதிகளில் மலையை குடைந்து அமைக்கப்பட்டுள்ள. காண்டூர்  கால்வாய் வழியாக, திருமூர்த்தி அணைக்கு  தண்ணீர் கொண்டு வரப்பட்டு சேமிக்கப்படுகி றது. பிரதான கால்வாய் மூலம் நான்கு மண்ட லங்களாக பிரிக்கப்பட்டு, பாசன நிலங்க ளுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. மூன்றாம் மண்டல பாசனத்திற்கு, கடந்த ஏப்ரல் மாதம் தண்ணீர் வழங்கப்பட்டு நிறைவு  செய்யப்பட்டது.  இந்நிலையில், இத்திட்டத்தின் ஆதார மாக உள்ள காண்டூர் கால்வாயில் விடுபட்ட  பகுதிகளில் புதுபிக்கும் பணிகள் மற்றும் பிர தான கால்வாயில் 5 இடங்களில் கான்க்ரீட்  கால்வாயாக மாற்றும் பணி துவங்கி நடை பெற்று வந்தது. பணிகள் முடிவடைந்து,  நான்கு மாதங்களுக்கு பிறகு, திட்ட தொகுப்பு  அணைகளிலிருந்து காண்டூர் கால்வாய் மூலம் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல்  திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வந்து சேமிக்கப்பட்டு வந்தது. இதனால், அணையின் நீர்மட்டம் படிப்ப டியாக உயர்ந்து புதனன்று காலை நிலவரப் படி, அணையின் நீர்மட்டம் 55.35 அடியாக உயர்ந்தது. அணைக்கு நீர்வரத்து காண்டூர் கால்வாய் மூலம் வினாடிக்கு 821 கன அடி யாகவும் இருந்தது. நடப்பாண்டு பருவமழை பெய்யாத தால், கடும் வறட்சி நிலவுகிறது. திட்ட தொகுப்பு அணைகளிலும் நீர் இருப்பு பெரும ளவு குறைந்தது. இதனால் ஆகஸ்ட் மாதம்  நான்காம் மண்டல பாசனத்திற்கு நீர் திறப்ப தும், 5 சுற்றுகள்  தண்ணீர் வழங்குவதிலும் சிக் கல் ஏற்பட்டது.

மேலும், விவசாயிகள் நீர்தி றப்பை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், விவசாயிகளின் கோரிக் கையையேற்று, திருமூர்த்தி அணையிலி ருந்து, நான்காம் மண்டலப் பாசனப் பகுதி களுக்குட்பட்ட, 94 ஆயிரத்து 68 ஏக்கர் நிலங்க ளில் உள்ள பயிர்களை காப்பாற்றவும், கால் நடைகளின் குடிநீர் தேவைக்காகவும் செப்.20  முதல் அக்.11 வரை 21 நாட்களுக்கு ஒரு சுற் றுக்கு 2 ஆயிரம் மில்லியன் கன அடி தண்ணீர்  திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது.  அதேபோல், பிஏபி., பாலாறு பழைய ஆயக்கட்டு பாசனம், தளி கால்வாய், ஏழுகு ளம் பாசனத்திற்குட்பட்ட, 2,786 ஏக்கர் நிலங்க ளுக்கும், செப்.20 முதல், வரும் டிச.,31 வரை  ஒரு நிரப்புக்கு, மொத்தம் 250 மில்லியன் கன  அடிநீர் திறந்துவிட அனுமதி வழங்கப்பட்டுள் ளது. இதனையடுத்து திருமூர்த்தி அணையி லிருந்து புதன்கிழமை தண்ணீர் திறக்கப்பட் டது. தண்ணீர் திறப்பு விழாவில், மாவட்ட ஆட் சியர் கிருஷ்துராஜ் தலைமையில் திட்டக்கு ழுத் தலைவர் மெடிக்கல் பரமசிவம், பாசன  சங்க நிர்வாகிகள், சிறப்பு தலைமை பொறி யாளர் பாண்டி, செயற்பொறியாளர்கள் மகேந்திரன், காஞ்சித்துரை, உதவி செயற் பொறியாளர்கள் ஆதிசிவன், மாரிமுத்து  உள் ளிட்ட அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பங் கேற்றனர்.