கோபி, டிச.3- கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையிலி ருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன் கோட்டை வாய்க்கால்களில் இரண் டாம் போக நஞ்சை பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கொடி வேரி தடுப்பணை மூலம், தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பகுதிக ளில் 24500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந் நிலையில், இரண்டாம் போக நஞ்சை பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண் டுமென பாசன பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை யேற்று பவானிசாகர் அணையிலி ருந்து பவானி ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் என அரசு ஆணை பிறப்பித்தது. இதனைத்தொடர்ந்து, ஞாயிறன்று பவானி ஆற்றில் கட்டப் பட்டுள்ள கொடிவேரி தடுப்பணையி லிருந்து தடப்பள்ளி, அரக்கன் கோட்டை வாய்க்காலில் தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நீர்வளத்துறை தலைமை பொறியாளர் சதீஸ்குமார், உதவிப் றியாளர் குமார் மற்றும் நீர்வளத் துறை அலுவலர்கள், வாய்க்கால் களில் தண்ணீரை திறந்து விட்டனர். இதில், முதற்கட்டமாக தடப்பள்ளி வாய்காலில் 200கனஅடி நீரும் அரக் கன்கோட்டையில் 100 கனஅடி நீரும் திறக்கப்பட்டு படிப்படியாக நீரின் அளவு உயர்த்தப்பட்டு, தடப்பள்ளி யில் 735 கனஅடி நீரும், அரக்கன் கோட்டையில் 380 கனஅடி நீரும் 120 நாட்களுக்கு திறக்கப்படும். எனவே, விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். தண்ணீர் திறப்பால், விவசாயிகள் சாகுபடிக்கான பணி களை தொடங்கியுள்ளனர்.