districts

img

அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு: விவசாயிகள் வரவேற்பு

உடுமலை, அக்.13-  அமராவதி அணையிலிருந்து, திருப்பூர், கரூர் மாவட்ட பாசன நிலங்களிலுள்ள நிலைப்பயிர்கள் மற்றும் குடிநீர் தேவைக்காக, 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட் டது. இதற்கு விவசாயிகள் நன்றி தெரிவித்து வரவேற்றுள்ளனர். உடுமலை அமராவதி அணை  மூலமாக, திருப்பூர், கரூர் மாவட்டங் களில் சுமார் 54 ஆயிரத்து 637 ஏக் கர் நிலங்கள் பாசன வசதி பெறு வதுடன், ஆற்றின் வழியோர கிரா மங்களுக்கு குடிநீர் ஆதாரமாக வும் உள்ளது. அணையிலிருந்து, ஜூன் 1 ஆம் தேதி முதல், பழைய ஆயக்கட்டு, 8 ராஜவாய்க்கால் பாச னத்தில் உள்ள 7 ஆயிரத்து 520 ஏக் கர் நிலங்களுக்கு நீர்திறக்கப்பட்டு  80 நாள் திறப்பு, 55 நாட்கள் அடைப்பு என்ற முறையில், வரும் 30ஆம் தேதி வரை நீர் வழங்கப்பட்டு வரு கிறது. பருவமழை ஏமாற்றியதால்,  அணைக்கு போதிய நீர்வரத்து இல் லாததால், அணையில் குறைந்த  அளவே தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் அலங்கியம் முதல் கரூர் வரை வலது கரை பழைய ஆயக் கட்டு பாசனம், மற்றும் புதிய ஆயக் கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறப் பதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், தென்மேற்கு பருவமழை ஏமாற்றிய தால், பாசன பகுதிகளில், கடும்  வறட்சி நிலவி வருகிறது. பழைய, புதிய ஆயக்கட்டு பாசன நிலங்க ளில் உள்ள தென்னை, கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களை காப் பாற்றவும், கால்நடைகள், மற்றும் வழியோர கிராமங்களின் குடிநீர் தேவைக்காகவும் அணையிலி ருந்து, தண்ணீர் திறக்க விவசாயி கள் தொடர்ந்து வலியுறுத்தினர். இதனையேற்று, பயிர்களை காப் பாற்றும் வகையில், சிறப்பு நனைப்பு குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு திருப்பூர், கரூர் மாவட் டங்களில் பழைய ஆயக்கட்டு பாச னத்தில், அலங்கியம் முதல் கரூர் வரை, 10 வாய்க்கால் பாசனத்திற் குட்பட்ட 21 ஆயிரத்து 867 ஏக்கர் நிலங்களுக்கு, வெள்ளியன்று முதல் 15 நாட்களுக்கு ஆற்று மதகு வழியாக, 1,503.36 மில்லியன் கன  அடி தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல, புதிய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள, 25 ஆயிரத்து 250 ஏக்கர் நிலங்க ளுக்கும் பிரதான கால்வாய் மூலம் 15 நாட்களுக்கு 570 மில்லியன் கன அடி திறக்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில், அமராவதி ஆறு,  பிரதான கால்வாயில் வெள்ளி யன்று முதல் தண்ணீர் திறக்கப் பட்டது. இவ்விழாவில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆட் சியர் கிருஷ்துராஜ், சார் ஆட்சி யர் கிர்த்திகா உள்ளிட்டவர்கள் பங் கேற்றனர். அமராவதி அணையின் நீர்மட்டம் மொத்தமுள்ள 90 அடி யில், 68.05 அடியாகவும், நீர்வரத்து  விநாடிக்கு 482 கன அடியாகவும் உள்ளது.