திருப்பூர், பிப்.11- திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனை வளாகத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் ரோட்டரி மற்றும் பொது நல அறக்கட் டளை சார்பில் ரூ.90 கோடி செலவில் அதி நவீன புற்றுநோய் மையம் பணிகள் நடை பெற்று வருகிறது. அதிகளவிலான தொழில் துறை பணியாளர்கள் இருப்பதால் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் புற்றுநோய் மையத்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு விரிவான மருத்துவ அறுவை சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு புற்று நோயியல் பிரிவு, ஐஎம்ஆர்டி, ஐஜிஆர்டி, எச்டிஆர் உள் கதிர்வீச்சு மருத்துவம், மருத் துவ புற்று நோயியல் பிரிவு, அறுவை சிகிச்சை புற்று நோயியல் பிரிவு, அணு மருத்துவம் முழு உடல் பெட் சிடி ஸ்கேன், இருதய மருத் துவ கேத் லேப் உள்ளிட்ட நவீன வசதிகளு டன் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலை யில், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யில் வளாகத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புற்றுநோய் நோயாளிகளின் புத்துணர்வு மைய கட்டிடம் கட்டும் பணியை செவ்வா யன்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார். இதைதொடர்ந்து, ராம்ராஜ் காட்டன் நிறு வனர் கே.ஆர்.நாகராஜன் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடிக் கான காசோலையை அமைச்சரிடம் வழங்கி னார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ், மேயர் நா.தினேஷ் குமார் உட் பட பலர் கலந்து கொண்டனர்.