கோவை, ஜூன் 20– டாஸ்மாக் ஊழியர் பணி நேரத்தை முறைப்படுத்தி, ஊதியத்தை வரைமுறைப் படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை முன்வைத்து கோவை, சேலத்தில் மண் டல அளவிலான ஆர்ப்பாட்டம் சிஐடியு டாஸ் மாக் ஊழியர் சங்கத்தின் சார்பில் நடைபெற் றது. டாஸ்மாக் ஊழியர்களின் பணி பாது காப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும். நீண்ட காலம் கிடங்கு பணியில் உள்ளவர்களுக்கு கடைப்பணி வழங்க வேண்டும். பணிவரன் முறை, கால முறை ஊதியம், இஎஸ்ஐ மருத் துவ திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கேர ளாவை போன்று டாஸ்மாக் ஊழியர்களின் பணி நேரத்தை முறைப்படுத்திடவும், ஊதி யத்தை வரைமுறைப்படுத்திட வேண்டும். இதேபோன்று கணினிமயப்படுத்தி, வாடிக் கையாளர்களுக்கு ரசீது வழங்க வேண்டும். குறைதீர்க்கும் கூட்டங்களை முறையாக நடத்திட வேண்டும். சிதைவு ஏற்படுகிற பாட் டில்கள் இழப்பீட்டு கணக்கில் சேர்க்க வேண் டும். காலி பாட்டில்கள் திரும்பப் பெறுகின்ற முறையில் மாற்றம் செய்ய வேண்டும், ஊழி யர்களின் பணி சுமையை கருத்தில் கொண்டு கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடபெற்றது. கோவை சிவானந்த காலனி, பவர் ஹவுஸ் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ். மூர்த்தி தலைமை ஏற்றார். இதில், சிஐடியு கோவை மாவட்ட செய லாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் வேலுச்சாமி, சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்க ஈரோடு மாவட்ட செயலாளர் பொன். பாரதி, நீலகிரி மாவட்ட செயலாளர் மகேஷ், திருப்பூர் மாவட்ட செயலாளர் அன்பு, கரூர் மாவட்ட செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றி னர். முடிவில், டாஸ்மாக் மாநில சம்மேளன துணைப்பொதுச்செயலாளர் எ.ஜான் அந் தோணி ராஜ் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத் தில் திரளானோர் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். சேலம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐ டியு டாஸ்மாக் ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.கே.தியாகராஜன் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் சி. நாகராஜன், சிறப்புரையாற்றினார். இதில் டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட செய லாளர் கே.விஜயகுமார், மாநில நிர்வாகி டி. செல்வராசு, திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் பி.சக்கரவர்த்தி, தருமபுரி மாவட்ட செயலாளர் வி.ஜெயராமன், வேலூர் மாவட்ட செயலாளர் கே.கண்ணன் உட்பட திர ளான டாஸ்மா ஊழியர்கள் கலந்து கொண்ட னர்.