districts

img

வட்டாரப் போக்குவரத்து அலுவலகமா? பழைய இரும்பு குடோனா?

நாமக்கல், ஏப்.22- வழக்கு, விபத்து சம்பந்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங் கள் நிரம்பி உள்ளதால், திருச் செங்கோடு வட்டாரப் போக்கு வரத்து அலுவலகம் பழைய இரும்பு குடோனாக காட்சியளிக் கிறது. நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு ஈரோடு சாலை வர கூராம்பட்டியில்  வட்டாரப் போக்கு வரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை குமாரபாளையத்தை உள்ளடக்கி செயல்பட்டு வந்த வட் டாரப் போக்குவரத்து அலுவலகம், குமாரபாளையம் தனி தாலுகா வாக பிரிக்கபட்டதால், ஆவத்தி பாளையம் பகுதியில் புதிய வட் டாரப் போக்குவரத்து அலுவலகம்  துவக்கப்பட்டது. இதன் காரண மாக தற்போது திருச்செங் கோட்டை உள்ளடக்கி செயல்பட்டு  வருகிறது. தினந்தோறும் அரசு வேலை நாட்களில், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், புதிய  பதிவெண் ரெஜிஸ்ட்ரேசன், மற்றும்  ஓட்டுநர் உரிமை பெறுவதற்காக என பல்வேறு தேவைகளுக்காக தினந்தோறும், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வட்டார போக்கு வரத்து அலுவலகத்திற்கு வந்து  செல்கின்றனர். வட்டார  போக்கு வரத்து துறையில் பணியாற்றும் அதிகாரிகள், அவ்வப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்டு வரு கின்றனர். அப்படி வாகன தணிக் கையின் போது, முறையான ஆவ ணங்கள் இல்லாமல், இயங்கும் வாகனங்களை பறிமுதல் செய்து  வருகின்றனர். அப்படி பறிமுதல்  செய்யப்படும் வாகனங்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் வர வழைக்கப்பட்டு, அதற்குரிய அப ராதத் தொகை செலுத்தப்பட்ட பிறகு, பறிமுதல் வாகனங்கள் திரும்ப வழங்கப்படுவது நடை முறை. 

இந்நிலையில், வட்டார போக்கு வரத்து அலுவலகத்தை சுற்றிலும்  பறிமுதல் செய்யபட்ட ஆட்டோ, வேன், லாரி உள்ளிட்ட வாகனங் கள்  நிறுத்தப்பட்டுள்ளது.  இந்த  வாகனங்கள் பராமரிப்பு இல்லாத  காரணத்தினால், பறிமுதல் செய் யப்பட்ட அனைத்து வாகனங்களும் மீண்டும் பயன்படுத்த முடியாத நிலையில், வாகனத்தில் உள்ள  அனைத்து பாகங்களும் துருப் பிடித்து, பழைய இரும்பு பொருட் களாக,எலும்புகூடுகளாக காட்சிய ளிக்கிறது.  இதுகுறித்து திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து துறை  அதிகாரி சரவணன் அவர்களிடம் கேட்ட போது, தான் பொறுப்புக்கு  வந்த நாள் முதல், வாகன தணிக் கையின் போது, முறையான  ஆவ ணங்கள் இன்றி இயங்கும் வாக னங்களை பறிமுதல் செய்தால், வாகனத்தின் உரிமையாளர்களை உடனடியாக அழைத்து,  மோட்டார்  வாகன சட்டத்தின் படி வாகனத் திற்குரிய அபராத தொகை செலுத் தப்பட்ட பிறகு வாகனங்களை மீண்டும் அவர்களிடமே ஒப்ப டைத்து வருகிறோம். தற்போது வட்டாரப் போக்குவரத்து வளாகப்  பகுதியில் நிறுத்தப்பட்டு இருக்கும்  வாகனங்கள் நான் பணிக்கு வரு வதற்கு முன்பாகவே பறிமுதல் செய்யபட்ட வாகனங்கள். அவை  அனைத்துமே அதிகபட்சம் ஆறு  மாதம் முதல் ஒரு வருடங்களுக் குள்ளாக பறிமுதல் செய்யப் பட்டவை. 

தற்போது பறிமுதல் செய் யப்பட்ட வாகனத்தின் உரிமையா ளர்களிடம் தொடர்ந்து பேசி வரு கிறோம். அவர்களுக்கு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் குறித்த  விவரங்களை தெரிவித்து, அலுவ லகத்திற்கு அழைத்துள்ளோம். பெரும்பாலானோர் பறிமுதல் வாக னத்தை திரும்பப் பெறுவதற்கு தயக்கம் காட்டுவதால், வாக னங்கள் அப்படியே  தேக்கமடைந் துள்ளது. மிக விரைவில் வாகன உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பறிமுதல் வாக னத்தை மோட்டார் வாகன சட்டத்தின் படி திரும்ப பெற்று செல் வதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும்.  ஒருவேளை பறிமுதல் செய்யப் பட்ட வாகனங்களின் உரிமையாளர் களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத பட்சத்தில், அதிகாரி களுடன் கலந்து ஆலோசனை செய்து, பறிமுதல் வாகனங்களை ஏலத்தில் விடுவது போன்ற அடுத்த  கட்ட பணிகள் நடைபெறும் என் றார்.  இதுகுறித்து சமூக ஆர்வலர்கள்  கூறுகையில், இங்கு மட்டுமல்ல தமிழ்நாட்டின் பல்வேறு பகுதி களிலும், ஏன் நீதிமன்றத்தில், காவல் நிலையங்களில் கூட பல் வேறு வழக்குகளின் பின்னனியில் பிடிக்கப்படும் வாகனங்கள், போதிய பராமரிப்பு இன்றி இருப் பதை நம்மால் காண முடிகிறது. மேலும் ஒன்றிய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தின் காரணமாக, மோட்டார் வாக னத்தை வைத்திருக்கும் பலரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். வாகனத்திற்கான எப்.சி.கட்டணம், இன்சூரன்ஸ் தொகையும் கணிச மாக அதிகரித்துள்ளது. அதன் நீட்சி யாகவும் வாகனங்களை முறை யாக பராமரிக்க முடியாத நிலை வாகன உரிமையாளர்களுக்கு ஏற் பட்டுள்ளது. எனவே, போக்குவரத்து துறை அதிகாரிகள், வாகனங்களை பறி முதல் செய்யும் அதே நேரத்தில், மோட்டார் வாகன சட்டத்தின் படி சம்பந்தப்பட்ட உரிமையாளரிடம் திரும்ப ஒப்படைப்பது, அல்லது பறிமுதல் செய்யப்பட்ட வாக னங்களை ஏலத்தில் விடுவது, போன்ற ஏற்பாடுகளை தொடர்ச்சி யாக செய்தால், இது போன்ற அரசு  சொத்துக்கள், மற்றும் தனிநபர் சார்ந்த சொத்துக்கள் சேதம் அடை வதை தவிர்க்கலாம் என்றார்.