கோயம்புத்தூர், மார்ச் 22- “தேர்தல் முடிந்ததும் சுவையான பிரியாணி போடுவதாக அறிவித்தி ருந்தோம்; ஆனால், இப்போது கோவைக்கு சுவையான ஆட்டுப் பிரி யாணியே தயாராகிக் கொண்டிருக்கி றது” என்று கோவையில் அண்ணா மலை போட்டியிடுவதை குறிப்பிட்டு, அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கிண்ட லடித்துள்ளார்.
கோவை காளப்பட்டி பகுதியில், திமுக வேட்பாளர் கணபதி ராஜ் குமாரை அறிமுகம் செய்யும் கூட்டத் தில் கலந்துகொண்டு, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உரை யாற்றினார். அப்போது அவர் பேசி யிருப்பதாவது: “10 ஆண்டு கால ஆட்சியில் கீழ் நோக்கிச் சென்ற தமிழகத்தை மீண் டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கின்றார் முதல்வர் ஸ்டாலின். இது தேர்தல் அல்ல, போர். இனத்தை காக்க வேண்டிய போர். இருண்ட ஆட்சியில் இருந்து தமிழகத்தை மீட்டு விட்டோம்.
அடுத்து இந்தியா வை மீட்டெடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது. இரண்டரை ஆண்டுகளில் 10 லட் சம் கோடி முதலீடு தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 31 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருக்கின்றார் முதல்வர். ஒன்றிய அரசு மாறியவுடன் நிறைய திட்டங் கள் கோவைப் பகுதிக்கு வர இருக் கின்றது. படித்த இளைஞர்கள் பல லட்சம் பேர் இருக்கின்றனர். தேர்தல் முடிந்தவுடன் மகத்தான அறிவிப்பு கள் இருக்கும். மகத்தான வளர்ச்சி காத்திருக்கின்றது.
நாங்கள் சொன்னால் மக்கள் நம்புவார்கள், ஆனால், எதிரே இருப்பவர்கள் எதைச் சொன்னாலும் மக்கள் நம்ப மாட்டார்கள். அவர்கள் வடையும், அல்வாவையும் தான் மக் களுக்கு கொடுக்கிறார்களே தவிர, வேறு எதையும் செய்யவில்லை. எல்லா இடத்திலும் ஒன்றிய அரசு கொடுத்த அல்வாவையும், மோடி சுட்ட வடையும் பற்றி மக்களிடம் கூறி யிருக்கிறோம்.
எல்லோரும் ஒன்றிய அரசு மீது மிகப்பெரிய கோபத்தில் இருக்கிறார்கள். அதன் வெளிப்பாடு, ஒட்டுமொத்த தொகுதிகளிலும் நிச்ச யமாக இந்தியா கூட்டணி பிரம் மாண்ட வெற்றி பெறும். இனத்தை காக்க வேண்டிய தேர்தல் இது. திமுகவினர் அனை வரும் சமூக ஊடகங்களில் பங்கேற்க வேண்டும்.
எதிரணி வாட்ஸ் ஆப், முகநூலில் கட்சியை வளர்க்கின்ற னர். ஒருவேளை ஜெயித்துவிட்டால் என கேட்கின்றனர். ஒருமண்ணும் கிடையாது. கோவையில் பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நாம்தான் வெற்றி பெறுவோம். தேர்தல் முடிந்ததும் சுவையான பிரியாணி போடுவதாக அறிவித்தி ருந்தோம். ஆனால், தற்போது (பாஜக வேட்பாளராக அண்ணா மலை அறிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டும் வகையில்) கோவை யில் மட்டன் பிரியாணியே ரெடியா கிக் கொண்டிருக்கிறது. சுவையான ஆட்டு பிரியாணி ரெடியாகிறது.” இவ்வாறு டி.ஆர்.பி. ராஜா பேசி யுள்ளார்.