திருப்பூர், டிச. 8 - அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் பட்டி யலிடப்பட்டு உள்ள குட்டைக்கு இணைப்பு கொடுக்க மறுப்பதைக் கண்டித்து சொக்கனூ ரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவிநாசி வட்டத்திற்கு உட்பட்ட திருப்பூர் ஒன்றியம் சொக்கனூர் கிராமம், புல எண். 296/2, காட்டுப்பாளையம், எருக்கல்மேடு என் னும் இடத்தில் உள்ள குட்டை அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் இணைக்கப்பட்டு பட்டி யலில் வந்துள்ளது. இந்நிலையில் சில மாதங் களுக்கு முன்பு அந்த குட்டையில் ஓ.எம்.எஸ் என்ற கருவி பொருத்துவதற்காக வந்த ஒப்பந் ததாரர்கள் பொருத்திவிட்டு, அருகில் உள்ள தனியார் நிலஉரிமையாளர் ஆட்சேபனை தெரிவித்ததால் பொருத்திய கருவியை திரும்ப எடுத்துச் சென்று விட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட சுற்று வட்டார விவசாயிகள் வருவாய் கோட்டாட்சியரி டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் மனு கொடுத்து முறையிட்ட னர். இதன் விளைவாக அவிநாசி வட்டாட்சி யர் நடவடிக்கை எடுத்து அளவீடு செய்து குட்டை அரசு புறம்போக்குக்கு சொந்தமா னது என்று உறுதி செய்யப்பட்டது.
அதன் பின்பும் எடுத்துச் சென்ற கருவி களை கொண்டு வந்து மேற்படி குட்டையில் பொருத்தி அத்திக்கடவு திட்டத்தில் இணைப்பு ஏற்படுத்தாத திட்ட அதிகாரிகளை கண்டித்தும், திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி சொக்கனூர் கிராமம், காட்டுப்பாளையம், எருக்கல்மேடு குட்டைக்கு அத்திக்கடவு திட் டத்தில் இணைப்பு வழங்க வேண்டியும், எடுத்துச் சென்ற கருவிகளை கொண்டு வந்து பொருத்த வேண்டியும், பாதிக்கப்பட்ட விவ சாயிகள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் திருப்பூர் வடக்கு ஒன்றிய குழு சார் பில் வியாழனன்று சொக்கனூர் கிராம நிர் வாக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த போராட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.அப்புசாமி தலைமை வகித் தார். விவசாயி நடராஜ் முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு விவசா யிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.குமார், மாவட்ட துணை செயலாளர் எஸ்.வெங்கடா சலம், கிராமிய மக்கள் இயக்க தலைவர் தொர வலூர் சம்பத், அத்திக்கடவு இயக்க சுப்பிர மணி உள்ளிட்டோர் உரையாற்றினார்கள். இப்போராட்டத்தில் பட்டம்பாளையம் ஊராட்சி தலைவர் சரவணன், வள்ளிபுரம் ஊராட்சி தலைவர் முருகேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க வடக்கு ஒன்றிய தலைவர் கே.ரங்கசாமி, ஊத்துக்குளி ஒன்றிய செய லாளர் எஸ்.கே.கொளந்தசாமி, அகில இந் திய விவசாய தொழிலாளர் சங்க வடக்கு ஒன் றிய தலைவர் ஆர்.சீனிவாசன் உள்ளிட்ட திர ளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.