districts

img

குடிநீர் இணைப்பு கட்டணத்தை குறைத்திடுக

சபை கூட்டத்தில் தீர்மானம் பென்னாகரம், செப்.15- குடிநீர் இணைப்பு கட்டணத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி பாப்பாரப்பட்டி 8 ஆவது வார்டில் நடைபெற்ற ஏரியா சபை கூட் டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பேரூ ராட்சி, 8 ஆவது வார்டில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வார்டு கமிட்டி ஏரியா சபை கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. இதற்கு சிபிஎம் பேரூராட்சி மன்ற உறுப்பினர் வே.விசுவநாதன் தலைமை வகித்தார். வார்டு கமிட்டி உறுப்பினர்கள் தனசேகரன், ராஜ சேகர், சந்தோஷ் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி மன்றத் தலைவர் பிருந்தா, திமுக நகர செயலாளர் சண்முகம் ஆகியோர் திட் டப்பணிகள் குறித்து விளக்கிப் பேசினர். வார்டு கமிட்டி செயலாளர் சபரீஷ் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர் பிரகாஷ் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள மற்ற பேரூராட்சி மற்றும் தருமபுரி நகராட்சி யைக் காட்டிலும் பாப்பாரப்பட்டி பேரூராட்சி யில் குடிநீர் கட்டணம் அதிகமாக உள்ளது. இதனை மற்ற பேரூராட்சிகளில் உள்ளதைப் போல் ஆண்டுக்கு ரூ.1800 ரூபாய் என்பதிலி ருந்து 1200 ஆக குறைக்க வேண்டும். மேலும், குடிநீர் இணைப்பு கட்டண உயர் வைக் கைவிட வேண்டும். தினசரி சீரான முறையில் ஒகேனக்கல் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். பாரதிதாசன் தெருவில் அகற்றப்பட்ட பொது குடிநீர் குழாயை மீண்டும் அமைக்க வேண்டும், கழிவுநீர்க் கால்வாய்களை தூர்வார வேண்டும். பாப்பா ரப்பட்டி சின்ன ஏரி மேம்பாட்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.