districts

மக்களோடு மக்களாக செங்கொடி இயக்கம்

மக்கள் பிரச்சினையில் தலையீ டும், செயல்பாடும் அவிநாசி பகுதி யின் அடையாளமாக மார்க்சிஸ்ட் கட்சியை வளர்த்துள்ளது. குறிப் பாக, அவிநாசி அத்திக்கடவு திட்டம் நிறைவேற 50 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தப்பட்ட பல கட்ட  போராட்டம் காரணமாக தற்போது  இத்திட்ட பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இதேபோல், புதுப் பாளையம் ஊராட்சி வஞ்சி பாளையம் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்ட மார்க்சிஸ்ட் கட்சி தொடர் போராட்டம் நடத்தி யதால் மேம்பாலம் கட்டி முடிக்கப் பட்டு இன்று தடையின்றி மக்கள் பயணம் செய்கின்றனர். 1989 ஆம் ஆண்டு அம்மா பாளையம் முதல் ராக்கி யாபாளையம் வரை செல்லும் பாதையை சீரமைக்கவும், இரண் டாவது குடிநீர் திட்டத்தை பயன் படுத்தி கட்டணக் கொள்ளையடிப் பதை தடுக்கவும் பொதுமக்கள் 1500 பேரைத் திரட்டி காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டத்தை தொடங்கி நான்காவது நாளில் கோரிக்கையை வென்றெடுத்தது. தற்போது திருப்பூர் மாநகர கழிவு களை அம்மாபாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழியில் கொட்டு வதை தடுக்க செங்கொடி இயக்கம் மக்களோடு இணைந்து போராடி வருகிறது.

அடிப்படை பிரச்சனைகளில் தலையீடு

வடுகபாளையம் ஆதிதிராவிடர் காலனி மக்களுக்கு பட்டா கேட்டு 9 வருடங்கள் தொடர் போராட்டம் நடத்தி 33 பேருக்கு பட்டா வழங்கப் பட்டது. நடுவச்சேரி ஊராட்சி புது காலனிக்கு சாலை வசதி இல்லா மல் பட்டா வழங்கப்பட்டது. சாலை,  குடிநீர், தெருவிளக்கு ஆகிய அடிப் படை வசதி பெற காத்திருப்பு போராட்டம், குடியேறும் போராட் டம் நடத்தப்பட்டது. இதனால் சாலை வசதி ஏற்படுத்தப்பட்டு கான்கிரீட் சாலை போடப்பட்டு, தெரு விளக்கு, குடிநீர் வசதிகள் செய்யப் பட்டுள்ளது. மேலும், வடுகபாளையம் -துலுக் கமுத்தூர், மாரப்பம்பாளையம் பிரிவு - ராயகவுண்டன்புதூர், பிச் சாண்டம்பாளையம் - பெரிய ஓலப்பாளையம் வரை உள்ள சாலைகளை சீரமைக்க நடைபய ணம், குடியிருக்கும் போராட்டம், 60 மணி நேர உண்ணாவிரதம், ஏர் ஓட்டி நாற்று நடும் போராட்டம் என நூதனமாக நடத்தியதால் சாலைகள் போடப்பட்டுள்ளது  தொன்மையான கோயில் சார்ந்த அவிநாசி ஒன்றியத்தில் செங் கொடி இயக்கம் மக்களோடு மக்களாக பொலிவுடன் முன்னேறி வருகிறது.