districts

img

மார்க்சிஸ்ட் கட்சியின் பெரும் போராட்டம் வெற்றி

சேலம், டிச.24- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  பெரும் போராட்டத்தின் விளைவாக, ரூ. 6 கோடி மதிப்பிலான சேலம் மாநக ராட்சிக்கு சொந்தமான பூங்கா நிலம் மீட் கப்பட்டது. சேலம் மாநகராட்சி, 21 ஆவது வார் டுக்குட்பட்ட அரியாக்கவுண்டம்பட்டி பகுதியில் 1988 ஆம் ஆண்டு 63 வீட்டும னைகள் பிரிக்கப்பட்டன. இதில் 20,604  சதுர அடிகள் கொண்ட நிலம், சிறுவர்  பூங்கா விளையாட்டு மைதானம் அமைக்க ஒதுக்கீடு செய்து, நகர் ஊர மைப்பு இணை இயக்குநரின் ஒப்புதல் பெற்று, வீட்டுமனை அங்கீகாரம் வாங்கி  அனைத்து மனைகளும் விற்பனை செய் யப்பட்டன. இந்நிலையில், பூங்கா  மற்றும் விளையாட்டு திடல் நிலத்தினை,  எம்.எஸ்.அசோகன் என்பவர் போலி யாக பத்திரம் தயாரித்து விற்பனை செய் துள்ளார். மேலும், காவல் துறையி னர் பாதுகாப்போடு பூங்கா இடத்தில்  வேலி அமைக்க தொடர்ந்து முயற்சி  செய்து வந்தார். ஒவ்வொரு முறையும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் விளையாட்டு வீரர்கள், பொது மக் களை திரட்டி முள்வேலி அமைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தினர். மேலும், ரூ.6 கோடி மதிப்பிலான அர சுக்கு சொந்தமான மாநகராட்சி பூங்கா நிலத்தை மீட்டு சிறுவர் பூங்கா, விளை யாட்டு மைதானம் அமைக்க வலியு றுத்தி நோட்டீஸ் வெளியிட்டு பொதுமக் களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி  மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணை யர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை தொடர்ச்சியாக சந்தித்து மனு அளிக்கப் பட்டது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத அசோகன் என்பவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கள் மீது காவல் நிலையத்தில் புகார ளித்தார்.

இந்நிலையில், மாநகராட்சி ஆணை யர் உள்ளிட்ட அதிகாரிகளின் முயற்சி யால் நிலம் அபகரிப்பை தடுத்து நிறுத்தி,  போலியாக தயாரித்த பட்டாவை ரத்து செய்ய மாநகராட்சி ஆணையர், சேலம் வருவாய் கோட்டாட்சியருக்கு கடிதம் அனுப்பினார். இதைத்தொடர்ந்து கோட்டாச்சியர் மூன்று முறை சம்மன்  அனுப்பி நடைபெற்ற விசாரணை யைத்தொடர்ந்து பூங்கா நிலம் பொது மக்களுக்கு சொந்தமானது என்பது உறு திப்படுத்தப்பட்டது. மேலும், போலி  பட்டா பத்திரத்தை ரத்து செய்தும், பூங்கா நிலத்தை சேலம் மாநகராட்சி பாராமரிக்க வேண்டும் என உத்தரவிடப் பட்டது. நில மீட்பு போராட்டத்தின் வெற்றி விழா பேரணி, சர்க்கரை புளியம ரம் அருகிலிருந்து கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் பி.பாலகிருஷ்ணன் மற் றும் கே.கண்ணன் ஆகியோர் தலைமை யில் துவங்கி பூங்கா வரையில் சென்று  வெடி வெடித்தும் பொது மக்களுக்கு  இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப் பட்டது. இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட  செயற்குழு உறுப்பினர் ஆர்.வெங்கட பதி, மாவட்டக்குழு உறுப்பினர் பி.சந்தி ரன், மேற்கு கமிட்டி உறுப்பினர் வி.பிர காஷ், கிளை செயலாளர்கள் எம்.மூர்த்தி, பி.சக்தி, ஆர்.சசிகுமார், ஆர்.ஜெயராஜ், அதிமுக செயலாளர் எஸ்.மணி, பி.ஞானபிரகாசம், திமுக மணி, கருணாநிதி மற்றும் பாலாஜி நகர் குடியி ருப்போர் சங்க நிர்வாகிகள் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.