districts

img

திருப்பூரில் மூவர் படுகொலை வழக்கு: தேடப்பட்டவர் கிணற்றில் பிணமாக மீட்பு

திருப்பூர், ஜூன் 1- திருப்பூரில் இரண்டு சிறுவர்களுடன் அவர்களது தாயார் உள்ளிட்ட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப் பட்டு வந்தவர் படியூர் அருகே வறண்ட கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார். திருப்பூர் மாநகராட்சி, நெருப்பெரிச்சல் அருகே சேடர்பாளையம் மெட்டுவாதோட் டம் பாலாஜி நகர் பகுதியில் கடந்த சில வாரங் களுக்கு திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த முத்துமாரி (35) என்ற தாயும், அவரது மகன் கள் தர்னிஷ் (9), நித்திஷ் (4) ஆகியோர்  வசித்து வந்தனர். இதில் முத்துமாரி கணவரு டன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரை விட்டு பிரிந்து தனது இரு மகன்களுடன் அங்கு தனியாக வசித்து வந்தார். அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்த போது, அவருக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்து வந்துள்ளதாக கூறப்படு கிறது. இந்நிலையில் கடந்த மே 23 ஆம் தேதி யன்று முத்துமாரியின் வீடு நீண்ட நேரமாக திறக்கவில்லை. இதனால் அவர் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் அவரை அழைத்துள் ளனர். ஆனால், எவ்வித பதிலும் கிடைக்க வில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் கதவை திறந்து பார்த்தபோது வீட்டிற் குள்ளே முத்துமாரி மற்றும் அவரது மகன் கள் என 3 பேரும் ரத்த வெள்ளத்தில் உயிரி ழந்த நிலையில் கிடந்துள்ளனர்.

இதுகுறித்த தகவலின்பேரில் திருமுரு கன்பூண்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, 3 பேரின் உடல்களை யும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள், வரவ ழைக்கப்பட்டு, அந்த வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்யப் பட்டது. மேலும், மாநகர காவல் ஆணையர் ஏ.ஜி.பாபு கொலை நடந்த இடத்தை பார்வை யிட்டார். இதுதொடர்பாக காவல் துறையி னர் மேற்கொண்ட தீவிர விசாரணையில், முத்துமாரியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து  சென்ற நபர் இவர்களை கொலை செய்திருக் கலாம் என்று கணிக்கப்பட்டு, 8 தனிப்படை கள் அமைக்கப்பட்டது. இந்த விசாரணையில் இந்த கொலை சம் பவத்தில் ஈடுபட்டது குஜராத் மாநிலம், போர் பந்தரை சேர்ந்த கோபால் என்ற கார்த்தி (50) என்பது தெரியவந்தது. இதனால் போலீ சார் ரயில், பஸ் நிலையம் என பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடு பட்டு வந்தனர். இதற்கிடையே புதனன்று காலை காங்கேயம் படியூர் அருகே, தண் ணீர் இல்லாத வறண்ட கிணற்றில் சைக்கிளு டன் ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக காங்கேயம் போலீசாருக்கு தகவல் கிடைத் தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத் திற்கு சென்று, உடலை கைப்பற்றினர். அப் போது பிணமாக கிடந்தது, மூவர் கொலை யில் தேடப்பட்டு வந்த கோபால் என்பது தெரி யவந்தது. இதனைத்தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய காங்கேயம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுசம்பந்தமாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.