பிஎஸ்என்எல் சங்க அங்கிகாரத் தேர்தலில் பிஎஸ்என்எல் எம்பிளாய் யூனியன் தொடர்ந்து கோவையில் 9 ஆவது முறையாகவும், அகில இந்திய அளவில் தொடர்ந்து 8 ஆவது முறையாக வெற்றியை தக்கவைத்துள்ளது. இதனையடுத்து பிஎஸ்என்எல் ஊழியர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடத்தில் ஈடுபட்டனர்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் உள்ள தொழிற்சங்கங்களுக்கான அங்கிகார தேர்தல் கடந்த 12 ஆம் தேதி நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை வெள்ளியன்று நடைபெற்றது. மாலை முடிவுகள் வெளியாகின.
இதில், அகில இந்திய அளவில் பிஎஸ்என்எல் எம்ளாயிஸ் யூனியன் தொடர்ந்து 8 ஆவது முறையாக மாபெரும் வெற்றியை பெற்றது.
கோவையில் 48 சதவிகிதம் வாக்குகளை பெற்றும் தொடர்ந்து 9 ஆவது முறையாக பிஎஸ்என்எல்யூ வெற்றியை தக்கவைத்து தனதாக்கிக்கொண்டது. இதில், மொத்த வாக்குகளில் என்எப்டி 52 வாக்குகளும், பிஎஸ்என்எல்யு 140 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் தலைமை அலுவலக வளாகத்தில் ஊழியர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வெற்றியை கொண்டாடினர். இதில், பிஎஸ்என்எல்யு மாவட்ட செயலாளர் மகேஷ்வரன், தலைவர் கல்யாணக்குமார், பொருளர் சரவணக்குமார், உதவி செயலாளர் சாகீர் அகமது உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.