districts

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டியிடம் மீண்டும் விசாரணை

கோவை, ஏப்.15-  கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அதி முக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டியிடம் இரண் டரை மணி நேரத்திற்கும் மேலாக தனிப்படையினர் விசா ரணை நடத்தினர். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோவை காவலர் பயிற்சி மைதானத்தில் உள்ள அலுவலகத் தில் கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டியிடம் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர். முன்ன தாக, கடந்த 2017 ஆம் ஆண்டு சம்பவம் நடந்தபோதே அப் போதைய கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஆறுக்குட்டியிடம், இந்த வழக்கை விசாரித்து வந்த  உதகை காவல்துறை கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி யிருந்தார். தற்போது, மீண்டும் மேல் விசாரணை தொடங்கப் பட்டுள்ள நிலையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  ஆறுக் குட்டியிடம் விசாரணை நடைபெற்றது.